வறியவனைத் தரையிலிருந்து தூக்கி விடுகிறார்
ஏழைகளை குப்பையிலிருந்து
கை தூக்குகிறார்
மலடியை மக்களுக்கு தாயாக்குகிறார்
மகிழ்ச்சியுடன்
வீட்டினிலே விளங்கச் செய்கின்றார் - 2
நம்
தேவன் வல்லவரே
நம்
தேவன் ஜீவிக்கின்றாரே - 2
1. ஆடுகளை மேய்த்து வந்த
சிறுவன் தாவீதை
எண்ணெய்
கொண்டு அபிஷேகம் செய்தவரே - 2
இஸ்ரயேலின் அரசனாய் அரியணை ஏற்றி - (2)
உமது
புகழை தலைமுறைக்கும் விளங்கச் செய்தீரே - (2) - நம் தேவன்
2. தாழ்நிலையில் நின்ற அடிமையை கடைக்கண் நோக்கினார்
எல்லாத்
தலைமுறைகளும் என்னைப் போற்றச் செய்தார் - 2
வல்லமை
மிக்கவர் அரும் பெரும் செயல் பல புரிந்தார் - (2)
அவர்
கிருபை தலைமுறைக்கும் உள்ளதாமே - (2) - நம் தேவன்
3. நெஞ்சிலே
செறுக்குற்றோரை சிதறடித்தாரே
தாழ்ந்தோரை அரியணையில் உயரச் செய்தாரே - 2
பசித்தோரை நலன்களால் வாழ வைத்தாரே
- (2)
அவர்
கிருபை தலைமுறைக்கும் உள்ளதாமே - (2) - நம் தேவன்
No comments:
Post a Comment