20 April 2019
இந்தக் குழந்தையை நீர் ஏற்றுக்கொள்ளும்
ஆ யேசுவே நீர் எங்களை
வந்தருள் இவ்வாலயத்தில் மகிமை
சரணம் நம்பினேன் யேசு நாதா
தருணம் இதுவே கிருபை கூரும்
வாரும் நாம் எல்லோரும் கூடி
சரணம் சரணம் சரணம் எனக்குன்
ஓடிவா ஜனமே கிறிஸ்து வண்டைக்
சிந்தையுடன் தெய்வாலயந்தனில்
ஆலயம்போய்த் தொழவா ருமென்ற
ஆலயம்
போய்த் தொழ வாரும்
289. ஆனந்தபைரவி ஆதிதாளம்
பல்லவி
ஆலயம்போய்த் தொழவா ருமென்ற தொனி
ஆனந்தப்பரவசம் அருளுதாத்துமந்தனில்,
அனுபல்லவி
ஆலயந்தொழுவது
சாலவும்[1] நன்றென
ஆன்றோருரை[2] நெறி
சான்ற வர்க்கானதே,
ஆவலாயதிகாலையும் பகல் மாலையுந் திருநாளிலும்பரன்
- ஆலயம்
சரணங்கள்
1. பரம சன்னதியென்றும் பரிசுத்த தூதர்கள்
பணிந்து புகழ்ந்து கீதம் பாடியஞ்சலி செய்யும்;
முறையோதுந் திருமறை கரமேந்தி தக்ஷணை
முழுமனதோடு கொண்டு உளம் இதழ் துதிவிண்டு[3]
மோட்ச மாநகர் காட்சியால் இக சாட்சியாம்
பரன்
மாட்சி காணவே. - ஆலயம்
2. பூர்வமுதல் தொழும்பர் போந்தாலயந்[4] தொழுதார்
புனித சுதனும் நமக்கினு முன் மாதிரி தந்தார்;
ஆர்வமுளாரவரே ஆராருடனுஞ் சென்றார்;
ஐயனின் மகிமையே அங்கும் விளங்க நின்றார்;
ஆதலாலினி யாரிலுங்குறை யோதிடாதென துள்ளமே
இனி. - ஆலயம்
3. தனித்தியா னத்துடன் சமுசார ஜெபம் நன்று;
சபையாரோ டர்ச்சனை தருதல் மிகவும் நன்று;
இனிதே சத்தியவேதம் பொருளறவே உணர்ந்து
இலகு சுடர்கள்போல உலகுக்கொளியே தந்து
எந்தையார்சுதன் சிந்தையில்வளர்ந் தென்றுமன்பதில்
ஒன்றவே திரு. - ஆலயம்
- ஜி.சே. வேதநாயகம்
அல்லேலூயா அல்லே
பாடல் Text file Download அல்லேலூயா அல்லே அல்லேலூயா அல்லே அல்லேலூய...