வாரும் நாம் எல்லோரும் கூடி


நாம் கூடி மகிழ் கொண்டாடுவோம்

293. (4) சங்கராபரணம்                                             ஏகதாளம்

பல்லவி
                        வாரும் நாம் எல்லோரும் கூடி,
                        மகிழ் கொண்டாடுவோம்;-சற்றும்
                        மாசிலா நம் யேசு நாதரை
                        வாழ்த்திப் பாடுவோம். ஆ!

சரணங்கள்

1.         தாரகம்[1] அற்ற ஏழைகள் தழைக்க நாயனா,-இந்தத்
            தாரணி யிலே[2] மனுடவ தாரம் ஆயினார். - வாரும்

2.         மா பதவியை இழந்து வறியர் ஆன நாம்,-அங்கே
            மாட்சி உற வேண்டியே அவர் தாழ்ச்சி ஆயினார். - வாரும்

3.         ஞாலமதில்[3] அவர்க்கிணை[4] நண்பர் யாருளர்,-பாரும்
            நம் உயிரை மீட்கவே அவர் தம் உயிர் விட்டார். - வாரும்

4.         மா கொடிய சாவதின் வலிமை நீக்கியே,-இந்த
            மண்டலத்தி னின்றுயிர்த் தவர் விண்டலஞ்[5] சென்றார். - வாரும்

5.         பாவிகட் காய்ப் பரனிடம் பரிந்து வேண்டியே,-அவர்
            பட்சம் வைத் துறும் தொழும்பரை[6] ரட்சை செய்கிறார். - வாரும்
- யோ. பால்மர்


[1] ஆதரவு
[2] பூமியிலே
[3] உலகத்தில்
[4] ஒப்பு
[5] விண்தலம்
[6] அடியாரை

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு