ஏற்றுக்கொண்டருளுமே தேவா


ஜெபத்தை ஏற்றுக்கொண்டருளும்

241. (238) காபி                                             ஆதி தாளம்

பல்லவி
            ஏற்றுக்கொண்டருளுமே, தேவா!-இப்போ
            தேழையேன் ஜெபத்தை இயேசுவின் மூலம்.

சரணங்கள்
1.         சாற்றின ஆதி ஆயத்த ஜெபமும்,
            சாந்தமாய் ஜெபித்த பாவ அறிக்கையும்,
            தேற்றிக்கொண்டருளும் மன்னிப்பின் மருவும்[1]
            திவ்விய பாதத்தில் வைக்கிறேன், ஸ்வாமி - ஏற்று

2.         குறைவுண்டு இதிலே, அருமைப் பிதாவே,
            குற்றம் மன்னித்திடும் யேசுவின் மூலம்;
            முறைப்படி கேட்க நான் தெரியாத பாவி;
            முழுதும் மேசையாமேல் வைக்கிறேன், ஸ்வாமி. - ஏற்று

3.         மறுரூப ஆவி வேண்டுமென் ஸ்வாமி;
            மனமெல்லாம் புதிதாக்கிடும் ஸ்வாமி,
            சிறுமைப்பட் டடியேன், கேட்கிறேன் ஸ்வாமி;
            தேற்றிடும், புது பெலன் ஊற்றிடும், ஸ்வாமி. - ஏற்று

4.         விசுவாசம் பெருகி நிலைத்திடச் செய்யும்;
            வெளிப்படும் மறைபொருள் பலப்படச் செய்யும்;
            சிசுவைப்போல் மறுபடி பிறந்திடச் செய்யும்;
            தேவாவி என்னுளந் தங்கிடச் செய்யும். - ஏற்று

- அருளாந்தம்


[1] வாசனை

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு