என் சிலுவை எடுத்து என் இயேசுவே


என் சிலுவை எடுத்துப் பின்னே வாறேன்

223. முகாரி                                                   சாபு தாளம்

பல்லவி

                        என் சிலுவை எடுத்து, என் இயேசுவே,
                        இச்சணம் பின்னே வாறேன்.

அனுபல்லவி

            இந்நில மீதினில் எனக்காயுயிர் விட்டீர்;
            இரட்சகரே! எனக்குள்ள யாவும் விட்டு. - என்

சரணங்கள்

1.         உலகும்மை விட்டிடினும்-உம் தயைாயால்
            உம்மை நான் பின் செல்லுவேன்,
            அலகை என்மேல் பாய்ந்து அதிகமாய் எதிர்த்தாலும்,
            அஞ்சாமல் போர்செய்து அவனை மேற்கொண்டு நான். - என்

2.         என்றன் சுதந்தரத்தை-இழக்கினும்
            சொந்தம் நீரே எனக்கு;
            பந்து சனங்களும் பற்றுறு நேசரும்
            பகைத்துப் பழிப்பின் என் பங்கு நீரல்லவோ! - என்

3.         பாடுகள் பட்டிடுவேன்,-உம்மோடு நான்
            பாரநுகஞ் சுமப்பேன்;
            ஆடுகளுக்காக அரிய சீவன் தந்த
            அன்பான மேய்ப்பரே, ஆடுகளை மேய்ப்பேன். - என்

4.         ஆசை மேற்கொள்ள விடேன்,-கெட்டலோக
            பாசம் அணுகவிடேன்;
            ஈசன் லோகத்திலென்றும் நேசமுடனே தங்கி
            மாசுகளற உந்தன் தாசனாய் விளங்கிட. - என்

- வே. சந்தியாகு

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு