ஏசுவைப் போல நட என் மகனே


ஏசுவைப்போல நட

254. மோகனம்                                               ஆதிதாளம்

பல்லவி

                   ஏசுவைப் போல நட-என் மகனே!
                   ஏசுவைப் போல நட-இளமையில்.

அனுபல்லவி

                        நீசனுமனுடர் செய் தோஷமும் அகற்ற,
                        நேயமுடன் நர தேவனாய் வந்த-ஏசுவைப்

சரணங்கள்

1.         பன்னிரு வயதில் அன்னை தந்தையுடன்
            பண்டிகைக்கு எருசலேம் நகர் வர,
            சின்ன வயதிலே தேசிகரைக் கேட்ட
            சீர்மிகு ஞானத்தை உள்ளந்தனிலெண்ணி - ஏசுவைப்

2.         சொந்தமாம் நாசரேத்தூரினில் வந்தபின்
            சுத்தமாய் தந்தைக் குதவியாய் வளர்ந்து,
            எந்த நாளுங் கோணி எதிர்த்துப் பேசாது
            இருந்து மகிழ்ந்தவர் சொற்படி நடந்த - ஏசுவைப்

3.         எனையிளைஞரோ டீனவழிசெல்லா,
            எவருக்கும் சிறந்த மாதிரியாய் நின்று
            ஞானம் தேவ கிருபை ஆவி பெலன் கொண்டு
            நரரின் தயவிலும் நாளாய் வளர்ந்தவுன் - ஏசுவைப்

- சா. பரமானந்தம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு