சரணம் சரணம் சரணம் எனக்குன்


எனக்குன் தயை புரியும்

292. (2) செஞ்சுருட்டி               ரூபகதாளம்

பல்லவி

                   சரணம், சரணம், சரணம் எனக்குன்
                   தயைபுரியும், என்பரனே.

அனுபல்லவி

            மரணத்தின் பெலன் அழித்துயிர்த்த என்
            மன்னா, ஓ சன்னா! - சரணம்                            

சரணங்கள்

1.         தரணிதனில் வந் தவதரித்த தற்
            பரனே, எனக்காக-வலு
            மரணம் அடைந்தும், உயிர்த்தெழுந்த தென்
            மகிமை, நித்திய பெருமை. - சரணம்

2.         சுரர்கள் போற்றும் பரனே, உனக்குத்
            துரோகியான எனக்கு-நீயே
            இரவு பகல் என் குறைவு நீக்க, உண்
            டேது நலம் என்மீது - சரணம்

3.         தப்பின ஆடதற் கொத்த அடியேனைத்
            தானே வந்து தேட;-உனக்
            கெப்படிச் சித்தம் உண்டானதிவ் வற்பனுக்
            கற்புதமாம் முடி சூட. - சரணம்

4.         எவ்வித நன்மைக்குங் காரணனே, உனை
            ஏழை அடியேனே-பற்றி
            இவ் வுலகத்தில் எவ்வேளையும் போற்றவே
            இரங்காய், எனக் கிரங்காய் - சரணம்

- யோ. பால்மர்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு