தந்தானைத் துதிப்போமே


தந்தானைத் துதிப்போமே

286. (284) உசேனி                                                  ரூபகதாளம்

பல்லவி
                    தந்தானைத் துதிப்போமே;-திருச்
                    சபையாரே, கவி-பாடிப்பாடி.

அனுபல்லவி

                        விந்தையாய் நமக்கனந்தனந்தமான,
                        விள்ளற்கரியதோர்[1] நன்மை மிக மிகத் - தந்தானைத்

சரணங்கள்

1.         ஒய்யாரத்துச்[2] சீயோனே,-நீயும்
            மெய்யாகக் களிகூர்ந்து நேர்ந்து,
            ஐயனேசுக்குனின் கையைக் கூப்பித் துதி
            செய்குவையே, மகிழ் கொள்ளுவையே, நாமும் - தந்தானைத்

2.         கண்ணாரக் களித்தாயே,-நன்மைக்
            காட்சியைக் கண்டு ருசித்துப் புசித்து;
            எண்ணுக்கடங்காத எத்தனையோ நன்மை
            இன்னுமுன்மேற் சோனா மாரிபோற் பெய்துமே. - தந்தானைத்

3.         சுத்தாங்கத்து நற்சபையே,-உனை
            முற்றாய்க் கொள்ளவே அலைந்து திரிந்து
            சத்துக் குலைந்துனைச் சத்தியாக்கத் தம்மின்
            ரத்தத்தைச் சிந்தி எடுத்தே உயிர் வரம். - தந்தானைத்

4.         தூரம்திரிந்த சீயோனே-உனைத்
            தூக்கியெடுத்துக் கரத்தினிலேந்தி,
            ஆரங்கள் பூட்டி அலங்கரித்து நினை
            அத்தன் மணவாட்டி யாக்கினது என்னை! - தந்தானைத்
5.         சிங்காரக் கன்னிமாரே,-உம்
            அலங்காரக் கும்மி அடித்துப் படித்து,
            மங்காத உம் மணவாளன் யேசுதனை
            வாழ்த்தி வாழ்த்தி ஏத்திப் பணிந்திடும். - தந்தானைத்

- வே. மாசிலாமணி


[1] உரைக்கமுடியாத
[2] அலங்கார

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு