புத்தியாய் நடந்து வாருங்கள்


புத்தியாய் நடந்து வாருங்கள்

257. (268) துஜாவந்தி                                              ஆதி தாளம்

பல்லவி

          புத்தியாய் நடந்து வாருங்கள் - திரு வசனப்
          பூட்டைத் திறந்து பாருங்கள்.

அனுபல்லவி

                        சத்தியத்தைப் பற்றிக்கொண்டு,
                        தன்னைச் சுத்தி பண்ணிக்கொண்டு,
                        நித்தமும் ஜெபம், தருமம்,
                        நீதி செய்து, பாடிக்கொண்டு - புத்தி

சரணங்கள்

1.         ஆருடைய பிள்ளைகள் நீங்கள்?-திரு உரையில்
            அறிந்து உணர்ந்து பாருங்கள்;
            சீருடைய தெய்வப் பிள்ளைகள்-நீங்கள்; ஏதிந்த
            தித்தரிப்பு[1] செய்யும் வகைகள்?
            கூருடன் மெய்த் திருமறை குறித்துச் சொல்வதைத் தினம்
            நேருடன் ஆராய்ந்து பார்த்து நித்திய ஒளியில் தானே - புத்தி

2.         ஆவியை அடக்காதிருங்கள்;-மறை சொல்லுவதை
            அசட்டை செய்யாமல் பாருங்கள்;
            ஜீவனை அடையத் தேடுங்கள்;-யேசுக் கிறிஸ்தின்
            சிந்தையைத் தரித்துக் கொள்ளுங்கள்;
            மேவியே ஜெபம், மன்றாட்டு, விண்ணப்பம் வேண்டுதலோடு
            தாவி, யேசுவைப் பிடித்துத், தளரா நடையோடுன்னிப் - புத்தி

3.         ஏசுக் கிறிஸ்தையன் பதத்தைத்-துதித்துப் போற்றி,
            இன்பமாய்ச் சத்திய வேதத்தை
            வாசித்து ஆராய்ந்து, நலத்தைப்-பிடித்துளத்தில்
            வைத்துக்கொண்டு, இவ்வுலகத்தை
            நேசியாமல் பகைத்துங்கள் நித்திய ரட்சிப்பைத் தினம்
            ஆசையோடு தேடி, நீங்கள் அடையும்படி முற்றிலும் - புத்தி

4.         பரிசுத்த கூட்டம் அல்லவோ?-நீங்கள் எல்லாரும்
            பரன் மகன் தேட்டம் அல்லவோ?
            தரிசிக்க நாட்டம் அல்லவோ?-கிறிஸ்தின் உள்ளம்
            தன்னிலே கொண்டாட்டம் அல்லவோ?
            பரிசனை செய்தவர்பொற் பாதத்தை மனதில் உன்னிக்,
            கரிசனை யோடு தேடிக், காணத் தீயோன் நாணப் படிப் - புத்தி

- மரியான் உபதேசியார்


[1] உபாயம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு