யேசுவின் ஒதுக்கில் நான் இறக்க அருள்புரியும்


யேசுவின் ஒதுக்கில் நான்

279. (342) சஹானா                                                 ஆதிதாளம்

பல்லவி

           யேசுவின் ஒதுக்கில் நான் இறக்க அருள்புரியும்.

அனுபல்லவி

                        நேசபரனே இந்த நீசன் கெஞ்சிக் கேட்கிறேன். - யேசு

சரணங்கள்

1.         நாள் ஓடும், சாவி சேரும், நாதா, எந்த நேரமோ?
            பாழுடல் விட்டு ஜீவன் பறக்கும் வேளையறியேன். - யேசு

2.         யேசுவை விட்டென் சாவு என்னைப் பிரித்திடாது;
            நீசன் அவரில் நின்றென் நேசரேயென்று சொல்வேன். - யேசு

3.         என் ஜீவன் இன்றுபோயும் என் மீட்பரால் நான் பாக்யன்;
            என் சாவு நாளை வந்தும் யேசுவுக்குள் நான் நிற்பேன். - யேசு

4.         நீர் என்னை இங்கே வைக்கும் நேரமட்டும் உமக்கே
            சீராக நான் பிழைக்கத், தேவா, எனை நடத்தும். - யேசு

5.         சீர்ப்படத் தாமதமேன்? ஜீவவழி பிடிப்பேன்;
            ஈறந்தத்தை நினைப்பேன், என் தீபமே சோடிப்பேன். - யேசு

6.         யேசுவின் நீதியால்நான் என்பாவத்தை மூடுவேன்;
            மாசற்றுச் சுத்தமாவேன் மனதில் விசுவாசித்து. - யேசு

7.         ஆண்டவரைங் காயங்கள் அடியேனின் அடைக்கலம்;
            மாண்டோர் அவர், நான் மாளேன், மரணம் எனதுபாக்யம் - யேசு

- ஞா. சாமுவேல்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு