இயேசு நான் நிற்குங் கன்மலையே


இயேசு நான் நிற்குங் கன்மலையே

215. நாதநாமக்ரியை                                                சாபு தாளம்

பல்லவி

            இயேசு நான் நிற்குங் கன்மலையே!-மற்ற
            எந்த ஆதாரமும் வெறும் மணல் தரையே.

சரணங்கள்

1.         இயேசுவின் நாமத்தின் மேலே-என்றன்
            எல்லா நம்பிக்கையும் வைத்தேன் அன்பாலே;
            நேசனையுங் கூட நம்பேன்,-நான்
            இயேசு நாமத்தின் மேல் முழுதுமே சார்வேன். - இயேசு

2.         இருள் அவர் அருள் முகம் மறைக்க,-நான்
            உறுதியாய் அவர் மாறாக் கிருபையில் நிலைப்பேன்;
            உரமாகக் கடும்புயல் வீச,-சற்றும்
            உலையாத[1] எனது நங்கூரமாம் அவரே. - இயேசு

3.         பெரு வெள்ளம், பிரவாகம் வரினும்-அவர்
            பிரிதிக்னை, ஆணை, இரத்தம் என் காவல்;
            இருதயத்தின் நிலை அசைய-அப்போ
            தேசுவே என் முழு நம்பிக்கையாமே. - இயேசு

4.         சோதியாய் அவர் வரும்போது-நான்
            சுத்தனாய்த் தரிசித்தே அவரைப் போலாவேன்;
            நீதியாம் ஆடை தரிப்பேன்,-சதா
            நித்திய காலமாய் ஆளுகை செய்வேன். - இயேசு

- வே. சந்தியாகு


[1] அழியாத

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு