இன்ப
காலமல்லோ ஜெபவேளை?
242. (239) பைரவி சாபுதாளம்
பல்லவி
ஆ! இன்ப
கால மல்லோ-ஜெபவேளை
ஆனந்த காலமல்லோ?
அனுபல்லவி
பூவின்
கவலைகள் போக்கி என் ஆசையைப்
பொன்னுல
காதிபன் முன்னே கொண்டேகிடும். - ஆ!
சரணங்கள்
1. துன்பம் துயர் நீக்கி,-பொல்லாங்கன்-சோதனைகள்
போக்கி,
அம்பர[1] வாசிகளோ-டிதயத்தை-இன்ப
உறவாக்கி,
கெம்பீரமாகவே தம்பிரான் ஆசனம்
கிட்டி மகிழ்வுடனுற்று வரச்
செய்யும். - ஆ!
2. ஜீவ ஆறுதல் பெற்று,-பிஸ்காவின்-சிகரமதனில்
உற்று,
தேவ நகர் கண்ணுற்றுச்-சடலத்தை[2]-ஜெகத்தில்
எறிந்துவிட்டு,
ஆவி களிப்புடன் ஆகாயஞ் செல்லவே,
அன்போடு பார்த்து நல் வந்தனஞ்
சொல்லுவேன். - ஆ!
- அருள்திரு. ம. வேதமாணிக்கம்
No comments:
Post a Comment