ஆ இன்ப கால மல்லோ ஜெபவேளை


இன்ப காலமல்லோ ஜெபவேளை?

242. (239) பைரவி                                         சாபுதாளம்

பல்லவி

            ஆ! இன்ப கால மல்லோ-ஜெபவேளை
            ஆனந்த காலமல்லோ?

அனுபல்லவி

            பூவின் கவலைகள் போக்கி என் ஆசையைப்
            பொன்னுல காதிபன் முன்னே கொண்டேகிடும். - ஆ!

சரணங்கள்

1.         துன்பம் துயர் நீக்கி,-பொல்லாங்கன்-சோதனைகள் போக்கி,
            அம்பர வாசிகளோ-டிதயத்தை-இன்ப உறவாக்கி,
                        கெம்பீரமாகவே தம்பிரான் ஆசனம்
                        கிட்டி மகிழ்வுடனுற்று வரச் செய்யும். - ஆ!

2.         ஜீவ ஆறுதல் பெற்று,-பிஸ்காவின்-சிகரமதனில் உற்று,
            தேவ நகர் கண்ணுற்றுச்-சடலத்தை-ஜெகத்தில் எறிந்துவிட்டு,
                        ஆவி களிப்புடன் ஆகாயஞ் செல்லவே,
                        அன்போடு பார்த்து நல் வந்தனஞ் சொல்லுவேன். - ஆ!

- ம. வேதமாணிக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு