காணிக்கை தருவாயே கர்த்தருக்குனது


காணிக்கை தருவாயே

276. முகாரி                                                   ஆதிதாளம்

பல்லவி
                   காணிக்கை தருவாயே-கர்த்தருக்குனது
                   காணிக்கை தருவாயே

அனுபல்லவி

            காணிக்கை தா உனக்காய் ஆணிக் குரிசி லேசு
            வேணும் ரட்சிப்பினை நீ காணும்படி செய்ததால். - காணிக்கை

சரணங்கள்

1.         பத்தில் ஒரு பங்குதானோ?-பத்தினில் கட்டுப்
            பட்ட யூதருக் கல்லவோ?
            அத்தன் உனக்களித்த அளவை உட்கார்ந்து பார்த்தால்,
            பத்தில் ஒரு பங்கல்ல, பல மடங்காகிடாதோ? - காணிக்கை

2.         உன்றன் உடல் உன் சொந்தமோ?-அதைவிடினும்
            உன் மனம் ஆவி பந்தமோ?
            அன்னவன் உடைய தென்றறிந்து உணர்வாயானால்
            உன்னையும் உன்னுடைய உடைமையுமல்லோ ஈவாய்?- காணிக்கை

3.         தேவ வசனம் பரப்ப,-அதனுக்கென்று
            செல்லும் செலவை நிரப்ப,
            ஆவலாய் யேசுவுக்கே ஆராதனை நடத்தும்
            தேவ ஊழியத்துக்கும் திறந்த மனதுடனே - காணிக்கை

4.         பயிர் பலன் மூலமாகவும்,-இன்றும் பலர்க்குப்
            பணம் முதலானதாகவும்,
            உயிர்ப் பிராணியாகவும் உதவும் கடவுளுக்கே
            உயிரைப் படைப்பாயோ, உடைமையைக் கொடாவிடில்? - காணிக்கை

- ல. பொன்னுசுவாமி

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு