கிஞ்சிதமும் நெஞ்சே அஞ்சிடாதே


விசுவாசக் கேடகத்தைப் பிடி

229. (196) பியாகு                                          ரூபக தாளம்

பல்லவி

            கிஞ்சிதமும் நெஞ்சே, அஞ்சிடாதே;-நல்ல
            கேடகத்தைப் பிடி நீ;-விசுவாசக்
            கேடகத்தைப் பிடி நீ.

அனுபல்லவி
            வஞ்சனையாகவே பேய் எதிர்த்துன்றனை
            வன்னிக்[1] கணைதொடுத் தெய்கின்ற வேளையில்,
            நெஞ்சில் படாமல் தடுக்க அது நல்ல
            நிச்சயமான பரிசை அறிந்து நீ. - கிஞ்சிதமும்

சரணங்கள்
1.         பாவத்தை வெறுக்க, ஆபத்தைச் சகிக்க,
            பத்தியில் தெளிக்கவும்,-நித்ய
            ஜீவனைப் பிடிக்க, லோகத்தை ஜெயிக்க,
            திறமை அளிக்கவும்,
            சாவே, உன் கூர் எங்கே? பாதாளமே, உன்
            ஜெயம் எங்கே? என்று நீ கூவிக் களிக்கவும்,
            தேவன் உகந்துனைத் தான் அங்கீகரிக்க,
            செய்யவுமே அது திவ்ய நல் ஆயுதம். - கிஞ்சிதமும்

2.         பண்டையர்[2] அந்தப் பரிசையினால்[3] அல்லோ,
            கண்டடைந்தார் பேறு?[4] -நல்ல
            தொண்டன் ஆபேல் முதலான வைதீகரைத்
            தொகுத்து வெவ்வேறு
            விண்டுரைக்கில் பெருகும்; தீ அணைத்ததும்,
            வீரிய சிங்கத்தின் வாயை அடைத்ததும்,
            கண்டிதமாய் வெற்றி கொண்டது மாம்பல
            காரியங்களையும் பார்; இது மா ஜெயம். - கிஞ்சிதமும்

3.         ஊற்றமுடன்[5] இப்பரிசைப் பிடித்திட
            உன் செயல் மா பேதம்;-அதின்
            தோற்றமும் முடிவும் ஏசுபரன் செயல்,
            துணை அவர் பாதம்;
            ஏற்றர வணைக்கவே பணிவாக
            இரந்து மன்றாடி அவர் மூலமாகவே,
            ஆற்றல் செய் தேற்றரவாளி பரிசுத்த
            ஆவி உதவியை மேவி, அடைந்து நீ. - கிஞ்சிதமும்
- யோ. பால்மர்


[1] அக்கினி
[2] முன்னோர்
[3] கேடகம்
[4] முத்திப்பேறு
[5] வல்லமையுடன்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு