மகிழ்ந்து புகழ்ந்து மிகப்பணிந்து


இயேசுவை வாழ்த்திப் போற்றும்

255. (266) தோடி                                           சாபுதாளம்

பல்லவி

                   மகிழ்ந்து, புகழ்ந்து, மிகப்பணிந்து, துதித்தேசுவை
                   வாழ்த்திப் போற்றும், என் ஆத்துமாவே.

அனுபல்லவி

            தகுந்த காலத்தில் க்றிஸ்துன் அகந்தைப்பவம் தீர்த்துனைத்
            தமது கிருபைச் சமுகந்தனில் சேர்த்ததால் - மகிழ்ந்து

சரணங்கள்

1.         சிந்தை மகிழ்ந்து சத்திய மார்க்கத்தில் ஓடு;
            தினந் தினம் ஜெபத்தில் தேவாவியைக் கூடு;
            விந்தையாய் மெய்ஞ்ஞான பதங்களைப் பாடு;
            விண் உலகத்தின் நித்ய வாழ்வினைத் தேடு;
            வீரமாய் மறை கூறும் சத்தியமே,
            நயமே, ஜெயமே-திவ்விய
            சாரமாய் வெகு தாரமாய்ப் பார்த்து,
            தேறுவாய், களி கூருவாய் தினம் - மகிழ்ந்து

2.         அவரைப் பின் சென்ற பின்பாசை ஆகாது;
            அநித்திய உலகத்தின் பாசம் ஆகாது;
            பவம் மிகும் மாமிச இச்சை ஆகாது;
            பரிசுத்த நெறி விட்டுப் பிரிவ தாகாது;
            பந்தயப் பொருளைச் சிந்தையில் எண்ணியே,
            நண்ணியே,[1] உன்னியே,-மகா
            விந்தைக் கிறிஸ்தரசன் உன்தன் சிரத்தின் மூடி,
            சந்தோஷமாய்ச் சூட்ட முந்தியோடு, மிக - மகிழ்ந்து

- மரியான் உபதேசியார்


[1] விரும்பியே

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு