நினையேன் மனம் நினையேன் தினம்


நினையேன் மனம்

206. (209) நாதநாமக்ரியை                  ரூபக தாளம்

பல்லவி
                    நினையேன், மனம், நினையேன் தினம்
                    உனை மீட்ட யேசுவையே.

அனுபல்லவி
             கன மேவிய மனு வேலனைக் கன காசன சுதனை.- நினை

சரணங்கள்

1.         கவன முடன் நீடி, உனக் காக அருள் தேடிப்,
            புவன மதில் பிறந்து திவ்ய புதுமை மிகச் சிறந்து,
            தவன மறு ஆத்மா ஜீவத் தண்ணீர் உண, சும்மா
            பவம் நீக்கிய வானாசனப் பதியை, சுரர்[1] கதியை. - நினை

2.         நரக அழலாலே[2] கெடு நாசம் வந்த காலே
            உருகி, மனம் இரங்கித், தொலைத் துண்மையுடன் இணங்கி,
            பரமனோடு உறவாக்கி, மெய்ப்பலனும் பெறத் தாக்கி,
            பெருக நலம்புரிந்தோன், மறை பேதம் இன்றி அறைந் தோன். - நினை

3.         ஜெயமும், புத்ர சுவிகாரமும், சிறந்த நீதியும், மகா
            நயந்த பரிசுத்தம் தேவ ஞானமுடன் மீட்பும்
            சுயமாக்கியும் அளித்தும் தனதுயிரைப் பலிகொடுத்தும்
            பயன் ஏலவே, தூய ஆவியைப் பரிந்தோனையே கனிந்தே. - நினை
- ஆ. அல்லின்


[1] தேவர்
[2] நெருப்பு

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு