நெஞ்சே நீ கலங்காதே


நெஞ்சே நீ கலங்காதே

232. (251) புன்னாகவராளி                    ஆதி தாளம்

பல்லவி

            நெஞ்சே நீ கலங்காதே;-சீயோன் மலையின்
            ரட்சகனை மறவாதே;-நான் என் செய்வேனென்று.

அனுபல்லவி
            வஞ்சர் பகை செய்தாலும், வாரா வினை பெய்தாலும் - நெஞ்சே

சரணங்கள்
1.         வினைமேல் வினை வந்தாலும்,-பெண்சாதி பிள்ளை,
            மித்ரு[1] சத்ருவானாலும்,
            மனையொடு கொள்ளை போனாலும், வானம் இடிந்து
            வீழ்ந்தாலும். - நெஞ்சே

2.         பட்டயம், பஞ்சம் வந்தாலும்,-அதிகமான
            பாடு நோவு மிகுந்தாலும்,
            மட்டிலா வறுமைப் பட்டாலும், மனுஷர் எல்லாம்
            கைவிட்டாலும் - நெஞ்சே

3.         சின்னத்தனம் எண்ணினாலும்,-நீ நன்மை செய்யத்
            தீமை பிறர் பண்ணினாலும்,
            பின்னபேதகம்[2] சொன்னாலும், பிசாசு வந்தணாப்பினாலும்[3] - நெஞ்சே

4.         கள்ளன் என்று பிடித்தாலும்,-விலங்கு போட்டுக்
            காவலில் வைத் தடித்தாலும்,
            வெள்ளம் புரண்டு தலை மீதில் அலைமோதினாலும். - நெஞ்சே

- வே. சாஸ்திரியார்


[1] நேசன்
[2] தவறான குற்றச்சாட்டு
[3] வந்து ஏய்த்தாலும்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு