வேத வசன விதைகளைப் புவியில்


வேத வசன விதைகளை
250. செஞ்சுருட்டி                                                    ஆதி தாளம்

பல்லவி

          வேத வசன விதைகளைப் புவியில்
          விதைப்பில் தெளிப்பில் வெகு பல பாடம்.

அனுபல்லவி

            பாதைதனில் விதைக்கும் பக்தனருள்வேதம்
            பக்தர்களைச் சேர்க்கும் சுத்தனருள் பாதம். - வேத

சரணங்கள்

1.         அதிசய வசனம் இந்திய கரையில்
            ஆழமாய் மரமாய் நடப்பட்டு வருதே,
            நதிவெள்ளம் பெறுதே நலமிக்கத்தருதே,
            நாளும்பாவியிடம் பேர் பெற்று வருதே. - வேத

2.         தீயர்கள் துணையாய் துன்புறும் வேளையில்,
            தேறுதலளித்துத் துலங்கிடும் வசனம்,
            நேயமாய் மனதில் இறுகவே நின்று
            நிமலன் கிருபை நிறைவுறச்செய்யும். - வேத

3.         நால்வகைத் தாளமேளங்கள் கொட்ட
            நடனமுடை சபைமிகக்கூடச்
            சாலவே மக்கள் இன்னிசை பாடச்
            சாமி வந்து சேர சந்தோஷங் கொண்டாட - வேத

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு