உனக்கொத்தாசை வரும் நல் உயர்


நல் உயர் பருவதம் இதோ

227. (253) பிலஹரி                              ரூபக தாளம்
பல்லவி
          உனக்கொத்தாசை வரும் நல் உயர் பருவதம்,-இதோ!

அனுபல்லவி
            தினமும் மனது நொந்து சிந்தை கலங்குவோனே. - உன

சரணங்கள்
1.         வானம் புவி திரையும்[1] வகுத்த நன்மைப் பிதாவின்
            மாட்சிமையின் கரமே வல்லமையுள்ள தல்லோ? - உன

2.         காலைத் தள்ளாடவொட்டார், கரத்தைத் தளரவொட்டார்;
            மாலை உறங்கமாட்டார், மறதியாய்ப் போக மாட்டார். - உன

3.         கர்த்தருனைக் காப்பவராம், கரமதில் சேர்ப்பவராம்;
            நித்தியம் உன்றனுக்கு நிழலாயிருப்பவராம். - உன

4.         பகலில் வெயிலெனிலும், இரவில் நிலவெனிலும்,
            இகல் தருவதுமில்லை, இன்னல் செய்வதுமில்லை. - உன

5.         தீங்கு தொடராதுன்னை, தீமை படராதுன்மேல்;
            தாங்குவார் தூதர் கோடி, தாளிடறாதபடி. - உன

6.         போக்கும் ஆசீர்வாதமாம், வரத்தும் ஆசீர்வாதமாம்;
            காக்கைக் குஞ்சுகள் முதல் கதறி நம்பிவிடுமே. - உன

7.         துன்ப துயரத்திலும் துக்க சமயத்திலும்,
            இன்பமுறும் பொழுதும் எல்லாம் உனக்கவரே. - உன


[1] கடல்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு