தாசரே இத்தரணியை அன்பாய்


தாரணியை யேசுவுக்குச் சொந்தமாக்குவோம்

267. சங்கராபரணம்                                                  ஆதிதாளம்

பல்லவி

         தாசரே, இத்தரணியை அன்பாய்
         யேசுவுக்குச் சொந்தமாக்குவோம்.

அனுபல்லவி

                        நேசமாய் இயேசுவைக் கூறுவோம், அவரைக்
                        காண்பிப்போம், மாவிருள் நீக்குவோம்,
                        வெளிச்சம் வீசுவோம். - தாச

சரணங்கள்

1.         வருத்தப்பட்டுப் பாரஞ்சுமந்தோரை,
            வருந்தியன்பாய் அழைத்திடுவோம்,
            உரித்தாய் யேசு பாவப் பாரத்தை,
            நமது துக்கத்தை, நமது துன்பத்தைச் சுமந்து தீர்த்தாரே. - தாசரே

2.         பசியுற்றோர்க்குப் பிணியாளிகட்குப்
            பட்சமாக உதவி செய்வோம்;
            உசித நன்மைகள் நிறைந்து, தமை மறந்து,
            யேசு கனிந்து, திரிந்தனரே. - தாசரே

3.         நெருக்கப்பட்டு ஒடுக்கப்பட்டோரை;
            நீசரை நாம் உயர்த்திடுவோம்;
            பொறுக்கவொண்ணா கஷ்டத்துக்குள்,
            நிஷ்டூரத்துக்குள், படுகுழிக்குள் விழுந்தனரே. - தாசரே

4.         இந்தியதேச மாது சிரோமணிகள்
            விந்தை யொளிக்குள் வரவழைப்போம்;
            சுந்தர குணங்களடைந்து, அறிவிலுயர்ந்து,
            நிர்பந்தங்கள் தீர்ந்து, சிறந்திலங்கிட. - தாசரே

5.         மார்க்கம் தப்பி நடப்போரைச் சத்ய
            வழிக்குள் வந்திடச் சேர்த்திடுவோம்;
            ஊக்கமாக ஜெபித்திடுவோம், நாமுயன்றிடுவோம்,
            நாம் உழைத்திடுவோம், நாம் ஜெயித்திடுவோம். - தாசரே

- வே. சந்தியாகு

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு