நான் நடந்து வந்த பாதையிலெல்லாம்

பாடல்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   நான் நடந்து வந்த பாதையிலெல்லாம்

                        என்னை சுமந்து வந்த நேசர் இயேசுவே - 2

                        கடந்த கால பாவங்களெல்லாம்

                        கொடும் குருசில் சுமந்து தீர்த்த நேசரே

 

1.         தாயாரின் வயிற்றினில் உருவானது முதல்

            என்னை தமக்காக தெரிந்து கொண்டு பிரித்தெடுத்தீர் - 2

            ஒரு தகப்பனைப்போல் என்னை சுமந்தவரை

            தினம் தழுவிடுவேன் சிறு பிள்ளையைப்போல்

            மார்போடு அணைத்தவரை பாடிடுவேன்

            முழு மனதோடு சேர்ந்தவரை துதித்திடுவேன் - நான் நடந்து

 

2.         வழிமாறி ஓடி ஒரு ஓடத்திலே

            கொஞ்சம் இளைப்பாற நினைத்தேன் அடிதளத்தினிலே - 2

            வலக்கரம் கொடுத்து என்னை எடுத்து

            மீன் வயிற்றினிலும் தனி இடம் கொடுத்து

            அழியாது காத்தவரை பாடிடுவேன்

            வழிவிலகாது மீட்டவரை துதித்திடுவேன் - நான் நடந்து

 

3.         வெகுதூரம் நடந்தே ஒரு மலையருகில்

            கொஞ்சம் இளைப்பாற சாய்ந்தேன் சூரைச்செடி நிழலில் - 2

            இரு வேளையிலும் கரும் காகம் கொண்டு

            சுவை கறியுடனே தினம் அப்பம் கொடுத்து

            பசி தாகம் தீர்த்தவரை பாடிடுவேன்

            எனக்கு இளைப்பாறுதல் எந்தவரை துதித்திடுவேன் - நான் நடந்து

 

 

https://www.youtube.com/watch?v=QnflfM19QSM

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே