பாவியே பாவியில் பாவியே உனில்

பாவியே பாவியில் பாவியே உனில்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

174.  இராகம்: சேனாவதி                          ரூபகதாளம்

 

                             பல்லவி

 

          பாவியே, பாவியில் பாவியே, உனில் அன்புண்டோ? சொல்

            பாவியே, பாவியில் பாவியே.

 

                             அனுபல்லவி

 

            கூவியே, கர்த்தரு ரைக்கிறார்; கூர்ந்துகேள், உள்ளிந்திரியமே

            பாவியே, என்கிறார் இயேசு பாவியா முனையே பார்த்து - பாவியே

 

                                    சரணங்கள்

 

1.         பாவத்தால் கட்டுண்டிருந்தாயே - பராபரனுடை

            கோபத்தால் காயமுங் கொண்டாயே;

            தேவனை விட்டகன்றாய்; பாவ விருள் அடைந்தாய்;

            பாவனையாக வுன்னையும் பவுசாக வைத்தவர் நானே. - பாவியே

 

2.         தாயுட அன்பு மாறுமோ? - தன்னருமைப் பிள்ளையைத்

            தயவுடன் அழைக்க மாட்டாரோ?

            தாயுமே மறந்திட்டாலும், தயவை நான் மறப்பதில்லை;

            நேயமே யுனை யோர்க்காலும் நினையாதே யிருப்பதில்லை - பாவியே

 

3.         என்னுடைய அன்பு மாறாததே - ஆகாய உயரமும்

            என்னன்பை எட்டி முடியாதே,

            பின்னுங்கேள்; பாதாளத்திலும் அன்பினுக்காழம் பெரியது;

            எண்ணுமுன் சாவினுறுதிபோல் என்னுடை அன்பு முறுதியே, - பாவியே

 

4.         கிருபையின் கிரியை முடியவே - அதிசீக்கிரமாகவே

            பெருமையாய் மகிமை காண்பையே

            விருத்தவா சனத்திலேயே வீற்றுமே யிருப்பதற்கு

            கர்த்தராம் என்னோடே நீ கனத்த பங்காளியாவாய் - பாவியே

 

 

- பாளையங்கோட்டை பாடல்.

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே