பாவி எனைச் சற்றே கண்பாரும்
177. இராகம்: சுருட்டி ஆதிதாளம்
பல்லவி
பாவி எனைச் சற்றே
கண்பாரும், ஸ்வாமி
அனுபல்லவி
தேவதிருப்
பாலனான ஜீவனின் மன்னாவே
சிந்தை விசாலா,
மனோலா, குணாலா
தேவசுலாவு[1] திவ்ய நேசா, ஏசு சர்வேசா - பாவி
சரணங்கள்
1. இந்த லோக வாழ்வை நாடி, என்தன் மனம் வாடுதே
தந்திரப் பசாசது
நிர்பந்தம் உறச் சாடுதே!
இடுக்கண் மிகுதுயர்
படுத்துதெனையே;
திடத்த உன துயிர் விடுத்ததிலையோ?
- பாவி
2. பந்தினம்[2] திரண்டு
கூடி, கொந்தளித்துப் பேசுதே;
அந்தியும் சந்தியுமாக நிந்தனை செய் தேசுதே;
பினும் உடல்
அடமோ டெனோடு சமர்[3] இடுதே;
நினைவு தவறிடவும்
மனது பதறுதே - பாவி
3. பத்துரை[4] மறுத்து
பேயின் எத்தினில் போனேனே;
குத்திரத்[5] துரோகத்தினால் சத்துருவானேனே;
பதைக்க மனமது கொதிக்கு துலகொடு
கதிக்க அலகை[6]யும் வதைக்கு தையோ?
- பாவி
- வேதநாயக
சாஸ்திரியார்
PDF
பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment