பிதாவே நன்றி சொல்கிறோம்
பிதாவே நன்றி
சொல்கிறோம்
இயேசுவே நன்றி சொல்கிறோம் - 2
தூய ஆவியே எங்கள் தெய்வமே
நன்றி சொல்கிறோம்
துதி ஆராதனை செய்கிறோம் -
(2)
1. தேவன் அருளிய சொல்லி முடியா ஈவுக்கு ஸ்தோத்திரம்
நீர் செய்த எல்லா நன்மைக்கும் ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரமே
எண்ணி
முடியா அதிசயங்கள் செய்தவரே ஸ்தோத்திரம் - (2) - துதி
2. நேசரே என் மேலே என்றும் பிரியம் வைத்தீரே
அகலம் ஆழம் எந்த அளவுமில்லா அன்பு காட்டினீரே
இரக்கத்திலும்
கிருபையிலும் அனுதினமும் முடி சூட்டினீரே - (2) - துதி
3. கடந்த நாட்களில் கண்மணி போல பாதுகாத்தீரே
சோதனையில் என்னை தேற்றியே தைரியப்படுத்தினீரே
தீராத
நோய்களெல்லாம் தழும்புகளால் சுகப்படுத்தினீரே - (2) - துதி
4. சகல ஆசீர்வாதங்களாலே ஆசீர்வதித்தீரே
குறைகளெல்லாம் நிறைவாக்கினீர் செழிப்பாய்
என்னை மாற்றினீர்
மனக்கவலை
தீர்த்தீரே மகிழ்ச்சியினால் நிரப்பினீரே - (2) - துதி
- SJC SELVAKUMAR
Comments
Post a Comment