Posts

Showing posts from June, 2018

ஒரே வழி எந்தன் இயேசுவின் வழி

                   ஒரே வழி எந்தன் இயேசுவின் வழி                         இன்ப மோட்ச நாட்டை நாம் சேரும் வழி                         பாமில்லாப் பாடு பரலோக நாடு                         அந்த நாடு சேர இயேசுவே வழி (2) 1.          பூமியில் பிறந்ததின் நோக்கத்தை நினைத்துக்             கலங்கிச் சோர்வாயொ?             நோக்கிப்பார் இயேசுவை             நோக்கமும் அர்த்தமும் ஈந்திடுவார்                   - ஒரே வழி 2.          பாவத்தின் பிடியினில் ஆத்துமா கலங்கி             பாரம் சுமப்பாயோ?             நோக்கிப்பார் இயேசுவை             பாவமும் பாரமும் நீக்கிடுவார்                             - ஒரே வழி 3.          திரும்பி நீ பார்த்துமே பாவத்தில் விழுந்து             நிம்மதி இழந்தாயோ?             நோக்கிப்பார் இயேசுவை             இரட்சிப்பின் சந்தோஷம் தந்திடுவார்               - ஒரே வழி 4.          பாவத்தின் சம்பளம் மரணத்தை அழிக்க             இயேசு தோன்றினார்             மரித்தாரே உயிர்த்தாரே             பாதையாய் தீபமாய் மாறினாரே                           -

சுய அதிகாரா சுந்தரக் குமாரா

பல்லவி            சுய அதிகாரா சுந்தரக் குமாரா             சொந்த உலகந்தனை துறந்த மரிமைந்தனான             - சுய சரணங்கள் 1.          அகிலத்தை ஒரு சொல்லில் அமைத்தனையே             அதை ஒரு பம்பரம் போலிசைத்தனையே             துகில் போல் ஆகாயமதை லகுவாய் சமைத்ததிலே             ஜோதி பல மாதிரியாய்த் தூக்கி வைத்தி லங்கவைத்த             - சுய 2.          கரை மத கற்ற குளம் புவியிலுண்டோ?             கடலுக்கவன் சொல்லயன்றிக் கரைகளுண்டோ?             திரை திரையாக ஜலம் மலைபோற் குவிழ்ந்தெழுந்தும்             சேதமின்றிப் பூதலத்தை மா தயவாய் பாதுகாக்கும்                    - சுய 3.          நரர் பலர் கூடி ஒரு மனை முடிக்க             நாளெல்லாம் உழைத்திட்டாலும் நாள் பிடிக்குமே             மர முயிர் தாது இன்னும் வான்புவி அனைத்தையும் ஓர்             வார்த்தையால் ஷணப் பொழுதில் நேர்த்தியாய் உண்டாக்கி வைத்த     - சுய 4.          பாவ மனுவோர் முகத்தைப் பார்த்தீரே             பாவப்பிணி தோள் சுமந்து தீர்த்தீரே             சுவாமி உம்மைப் பற்றும் சுவாமி தாசருக் கிரங்க வே

பாவி வா, பாவி வா பரனண்டையே வா

சரணங்கள் 1.        பாவி வா, பாவி வா பரனண்டையே வா           பாவப் பாரம் சுமந்திளைத்தோனே நீ வா 2.          பாவி வா, பாவி வா திகையாதே நீ வா             வரும் பாவியை ஓர் போதும் தள்ளேனே வா 3.          காணாத ஆட்டை மேய்ப்பன் தேடும் மாதிரிபோல்             நானே நல்ல மேய்ப்பன் உன்னைத் தேடி வந்தேன் 4.          தாகம் மிகுந்தோனே, தண்ணீரண்டை நீ வா             தாகம் தீர்த்திடுவேன் ஜீவ தண்ணீரினால் 5.          உந்தன் பாவத்துக்காய் நானே பாடுபட்டேன்             எந்தனுக்கு உந்தன் நெஞ்சம் தந்திடவா 6.          உனக்காய் மரித்தேன் ஈனக் கோலமதாய்             எனக்கே உனையே படைப்பாய் நிதமே.

கிறிஸ்து இயேசு தயாள பிரபு

                   கிறிஸ்து இயேசு தயாள பிரபு                         சிருஷ்டித்த தயவு                         இரட்சித்த உந்தன் முடிவு                         கீதம் பாடவே சரணங்கள் 1.          மாநிலத்தில் நீர் மானிடனானீர்             மாந்தர்கள் மத்தியில் சுற்றித் திரிந்தீர்             மாபெரும் துன்ப துக்கங்கள் ஏற்றீர்             பாவி என்னை இரட்சிக்க                                  - பிரிய இயேசு 2.          விஸ்வாசப் பேழை ஆழியிலிருக்க             புயல்களெல்லாம் அலைக் கழிக்க             இயேசுவே நீரே அலை அதட்டி             அக்கரைப் படுத்தினீர்                                       - பிரிய இயேசு 3.          பாவப் பிணியால் வாதிக்கப்பட்டேன்             பாடுகள் பட்டும் பயனைக் காணேன்             பின்வந்து உந்தன் வஸ்திரந் தொட்டேன்             பிழைத்தேன் அச்சணமே                                  - பிரிய இயேசு

காப்பார் உன்னைக் காப்பார்

பல்லவி                    காப்பார் உன்னைக் காப்பார்                         காத்தவர் காப்பார், இன்னும் இனிமேல் காத்திடுவார்                         கலங்காதே மனமே - காத்திடுவார் சரணங்கள் 1.          கண்டுனை அழைத்தவர் கரமதைப்பார், அவர் கைவிடாதிருப்பார்             ஆண்டுகள் தோறும் உனக்கவர் அளித்த ஆசிகளை எண்ணிப்பார்             என்ணிப்பார், என்ணிப்பார், எண்ணிப்பார்             ஒன்றொன்றாயதை எண்ணிப்பார்                                                           - காப்பார் 2.          இஸ்ரவேலுக்கு வாக்குப்படி இன்பக் கானான் அளிக்கவில்லையோ             இப்போதிவர்களை நிர்மூலம் செய்வதென்று பின்னும் இரங்கவில்லையோ             இல்லையோ, இல்லையோ, இல்லையோ             மனஸ்தாபம் கொள்ளவில்லையோ                                                         - காப்பார் 3.          வீழ்ச்சியில் விழித்துன்னை மீட்பவரும் இகழ்ந்துவிடாது சேர்ப்பவரும்             சிற்சில வேளையில் சிட்சையினாலுன்னைக் கிட்டியிழுப்பவரும்             ஜெயமும், கனமும், சுகமும்             இரக்கமா யுனக்க

கல்லறைக் காவலில் காயமுடன்

                   கல்லறைக் காவலில் காயமுடன்                         கடும் அசுத்தாவி பிடித்தோனவன்                         கனிவுடன் இயேசுவைப் பணிந்து நின்றான் 1.          விலங் கொடிக்கும் கொடும் லேகியோனவன் - இனி             வேதனை வேண்டாமென்றான்             விரட்டும் எம்மை பன்றிகளுள் என்றன் பேய்களுமே                     - கல்லறை 2.          கட்டளை பெற்று பன்றிக் கூட்டத்துள் செல்ல - அவை             கடலினில் மாய்ந்தனவே             கரைதனில் பேய் பிடித்தோன் சுகமடைந்தான் உடனே              - கல்லறை 3.          அதிசய நோய் பேய்களெல்லாம் இயேசு             நாதனைக் கண்டோடும்             அவரையே நீ நம்புவாயானால் ஆதரிப்பார் உன்னையே             - கல்லறை

அன்பர் அன்பை யாரால் கூறலாம்

பல்லவி             அன்பர் அன்பை யாரால் கூறலாம் - ஆ! ஆச்சரியம்             அன்பாகவே இருக்கும் என் நேசர்! அனுபல்லவி             அன்பின் உயரம் நீளம் அகலம் ஆழம் அளக்க யாரால் கூடும்!             அன்பரின் பேரன்பை இங்கு அழகாய்க் கூற யாரால் கூடும்!         - அன்பர் சரணங்கள் 1.          எல்லா ஜலமும் மையானாலுமே - அன்பை எழுதிட             எல்லா மரமும் பேனாவானாலுமே             ஆகாயத்தைத் தாளாக்கி அதிலெல்லாம் எழுதினாலும்             அன்பின் அம்சம் எழதித் தீ்ர்க்க அன்பர் எங்குதானுண்டு           - அன்பர் 2.          மாந்தர் மேலே பாய்ந்த அன்பைத்தான் - ஆழ்ந்து தூதரும்             பார்ப்பதில் பணிந்து குணிகிறார்             பாவி மேலே பாய்ந்த அன்பு சாவின் கூரை ஒடித்து வென்றது             என்ன அன்பு என்ன நேசம் மன்னரேசின் மகத்துவநேசம்!            - அன்பர் 3.          ஏழை என்னில் பாய்ந்த அன்புதான் - ஆ! ஏராளம்             ஏழை என்னால் பகரக் கூடுமோ             அல்லும் பகலும் கூடிப்பாடி அங்கும் இங்கும் அன்பைக் கூறுவேன்             அன்பின் இன்பம் ருசித்துப் புச

அன்பிதோ! அன்பிதோ! அன்பிதோ!

                   அன்பிதோ! அன்பிதோ! அன்பிதோ! என்னை                         அழைத்தீரரசே அருளாலே சரணங்கள் 1.          நாறிக்கிடந்த என் நாற்றத்தை நீக்கியதும் கிருபை             நாசணுமாகாமல் பாதுகாத்தணைத்து             மந்தையில் சேர்த்துக் கொண்டீரே                     - அன்பிதோ 2.          சுத்த ஜலத்தினால் சுத்திகரித்தீர் என்னை தமக்காய்             மீறிப்போகும் எந்தன் சிந்தை அகற்றி தம்             சித்தத்தைச் செய்யச் செய்தீரே                          - அன்பிதோ 3.          ஆவியீந்து எந்தன் காயம் தம் பரிசுத்தாலயமாம்             ஆதி தேவன் என்னைச் சொந்தமாக்கிக் கொண்டார்             என்னை பேரின்பமெனக்கே                                - அன்பிதோ 4.          தூய ஜீவியம் இப்பூலோகத்தில் யானும் நடத்த             தூய கீதமுடன் துயருடன் பாட             ஏழைக்கும் கிருபை செய்தீரே!                           - அன்பிதோ 5.          உம்மைச் சந்தித்திட தூய உம் சாயலெனக்கருளும்             உன்னதங்களிலே என்றும் உம்மோடொன்றாய்             தங்கிடத் தயவருளும்          

உலகில் நீ ஒர் தனிப் பிறவி

1.       உலகில் நீ ஒர் தனிப் பிறவி             உன்பால் இயேசு அருள் மேவி             தமது ஜீவனை உன்மேல் ஊதி             பாருக்குள் அனுப்பினார் இது பாரீர்                         உலகின் கண்ணிற்குப் புரியாத                         கல்வியில் சான்றோரும் விளங்காத                         வாழ்க்கை ஒன்றே நீ மேற்கொண்டுள்ளாய்                         கவனம் கவனம் முன் ஏகிச் செல்வாய் 2.          சிரிப்பார் சீறுவார் முணுமுணுப்பார்             உன் நிலை அறியாத மனிதர் பலர்             உன் ஜெபம் பாட்டு பேச்சு எல்லாம்             புரியார் பலர் உன்னை பகடி செய்வார் 3.          கிறிஸ்துவை வெளிதள்ளிக் கொலை செய்தார்             பக்தர்கள் பலரையும் சிறை செய்தோர்             கம்பத்தில் கட்டி வதை வதைத்தோர்             பலரும் இப்பூமியில் நிரம்ப உண்டு 4.          தயக்கமும் கலக்கமும் நடையில் வேண்டாம்             லௌகீகக் கவலைகள் எதுவும் வேண்டாம்             கல்வாரி மேட்டினில் கடைமனிதன்             ஏறும் வரை நாம் உறங்க வேண்டாம்

மாயையில் மனம் ஓடவையாதே

1.       மாயையில் மனம் ஓடவையாதே - உன்னை             விட்டாலது கொஞ்சம் நில்லாது;             பாவையில் கட்டின கயிற்றைப் போல் - அகற்றுப்             போகக் காலம் கிட்டி வருகுதைய்யோ;             ஒரு வழி பாரு தினம் உன்னை நேரு 2.          பூலோக வாழ்வதின் புகழென்ன? - பூ             வாடி உதிர்ந்தால் அதின் நிறமென்ன?             மாய உலகிலுனக்கென்ன? - ஜீவன்             வம்பில் விடுத்தால் அதன் பலமென்ன?             மாயை மறந்தோடு சுக இடம் தேடு 3.          பலமுள்ள சிம்சோனைக் குறைவு செய்த - படு             பாதகி நீயே தாசி தெலீலாளே!             மன திழந்த மொழியைக் கேட்டாயே - கெட்ட             பெலிஸ்தர் கையிலவனைக் கொடுத்தாயே             படுபாதகியே, நரகவாசி நீயே 4.          கழுதை எலும்பால் ஜெயங்கொண்டவனே - நீ             அழுது புலம்பி மாவரைப்பதென்ன?             பரகதி வாழ்வை நீ கெடுத்தாயே - பலர்             பரிகாசம் செய்ய உன்னைக் கொடுத்தாயே             மதி மறந்தவனே, துயரடைந்தவனே

ஜொலித்திடும் ஜொலித்திடும்

1.       ஜொலித்திடும் ஜொலித்திடும் தேவ அன்புதான்             ஜோதியாய் விளங்கிடும் தேவ மக்களில்             ஜொலித்திடும் ஜொலித்திடும் தேவ அன்புதான் 2.          மகிழுதே மகிழுதே எந்தன் உள்ளமே             மகிழ்ச்சி பொங்கும் நாடதை நாடிச் செல்லுதே 3.          வருகையின் காலமோ கிட்டிச் சேருதே             கிருபையின் காலமோ பறந்து செல்லுதே 4.          பாவியை அழைக்கிறார் இயேசு இரட்சகர்             பாசமாய் அழைப்பவரை நம்பி ஓடிவா

யுத்தம் ஒன்று வருதே

                   யுத்தம் ஒன்று வருதே, தேவ சேனை புறப்படு                         சத்துரு முன்னே வருகின்றான் இன்றே அவனை ஒழித்திடு 1.          இயேசுவை நீ பற்றிக்கொள்             உறுதியாகப் பிடித்துக்கொள்             தீங்கு நாளும் நெருங்கி வருதே             வல்ல ஆவி உன்னைத் தாங்குவார்             தங்கி உன்னைத் தாங்குவார்             துடிக்கும் இரத்தத்தோடு எழுந்து வா 2.          பயப்படாதே மகனே             நான் உனக்குக் துணையல்லோ             ஒருவனும் உன்னை அசைப்பதில்லையே             நான் உனக்கு கேடகம்             மகா பெரிய பெலனாம்             ஆவியின் பட்டயம் எடுத்து வா 3.          மாம்சத்தோடும் இரத்தத்தோடும்             ஒழிவதில்லை நம்யுத்தம்             தொடரும் வாழ்வின் கடைசி நாள் மட்டும்             இரத்தம் சிந்த நேரிட்டாலும்             அஞ்சா நெஞ்சர் இயேசுவின் பின்னே             துணிச்சலோடு பயணம் வைத்து வா

இயேசுவின் நாமம் இனிதான நாமம்

                   இயேசுவின் நாமம் இனிதான நாமம்                         இணையில்லா நாமம் இன்ப நாமம் 1.          பாவத்தைப் போக்கும் பயமதை நீக்கும்             பரம சந்தோஷம் பக்தருக்களிக்கும்                  - இயேசுவின் 2.          பரிமள தைலமாம் இயேசுவின் நாமம்             பார் எங்கும் வாசனை வீசிடும் நாமம்                 - இயேசுவின் 3.          வானிலும் பூவிலும் மேலான நாமம்             வானாதி வானவர் இயேசுவின் நாமம்                - இயேசுவின் 4.          நேற்றும் இன்றும் என்றும் மாறிடா நாமம்             நம்பினோரை என்றும் கைவிடா நாமம்             - இயேசுவின் 5.          முழங்கால் யாவும் முடக்கிடும் நாமம்             மூன்றில் ஒன்றாக ஜொலிப்பவர் நாமம்                - இயேசுவின் 6.          சாத்தானின் சேனையை ஜெயித்திட்ட நாமம்             சாபப் பிசாசை துரத்திட்ட நாமம்                     - இயேசுவின்

தொண்டு செய்வேன் என்றும்

                   தொண்டு செய்வேன் என்றும்                         தொண்டு செய்வேன் என்றும்                         தொண்டு செய்வேன் என் ஆண்டவர்கே 1.          அவர் அழைப்பை அனுசரித்து             தொண்டு செய்வேன் என் ஆண்டவர்கே              - தொண்டு 2.          வீடாணாலும், காடானாலும் 3.          கந்தையானாலும், நிந்தையானாலும் 4.          அடியானாலும், மிதியானாலும் 5.          மழையானாலும், வெயிலானாலும் 6.          வெப்பமானாலும், இன்பமானாலும் 7.          தனித்தானாலும், கூட்டமானாலும் 8.          மலையானாலும் பள்ளமானாலும்             தொண்டு செய்வேன் என் ஆண்டவர்கே              - தொண்டு       

மாறிடா எம்மா நேசரே - ஆ

1.       மாறிடா எம்மா நேசரே - ஆ             மாறாதவர் அன்பெந்நாளுமே             கல்வாரி சிலுவை மீதிலே             காணுதே இம்மா அன்பிதே - ஆ பல்லவி                         ஆ! இயேசுவின் மகா அன்பிதே                         அதன் ஆழம் அறியலாகுமோ                         இதற்கிணையேதும் வேறில்லையே                         இணை ஏதும் வேறில்லையே 2.          பாவியாக இருக்கையிலே - அன்பால்             பாரில் உன்னைத் தேடி வந்தாரே             நீசன் என்றுன்னைத் தள்ளாமலே             நேசனாக மாற்றிடவே                           - ஆ! இயேசு 3.          உள்ளத்தால் அவரைத் தள்ளினும் - தம்             உள்ளம் போல் நேசித்ததினால்             அல்லல் யாவும் அகற்றிடவே             ஆதி தேவன் பலியானாரே                     - ஆ! இயேசு 4.          ஆவியால் அன்பைப் பகிர்ந்திட - தூய             தேவனின் விண் சாயல் அணிய             ஆவியாலே அன்பைச் சொரிந்தார்             ஆவலாய் அவரைச் சந்திக்க                - ஆ! இயேசு 5.          நியாய விதி தினமதிலே - நீயும்             நில

பயப்படாதே பாரிலிப்போதே

பல்லவி                    பயப்படாதே பாரிலிப்போதே                         திகையாதே கலங்காதே அனுபல்லவி             தெரிந்து கொண்டேன் பேர் சொல்லி அழைத்தேன்             அறிந்து கொண்டேன் நீ என்னுடையவன் சரணங்கள் 1.          தண்ணீரை நீ கடக்கும்போது             உன்னோடு கூட நானிருப்பேன்             ஆறுகளை நீ கடக்கும்போது             அவைகள் உன்மேல் புரளுவதில்லை                - பயப்படாதே 1.          தண்ணீரை நீ கடக்கும்போது             உன்னோடு கூட நானிருப்பேன்             ஆறுகளை நீ கடக்கும்போது             அவைகள் உன்மேல் புரளுவதில்லை                 - பயப்படாதே 2.          அக்கினியில் நடக்கும் போது             அஞ்சவேண்டாம் வேகாதிருப்பாய்             அக்கினி ஜுவாலை உன்னைப் பற்றாது             விக்கினங்கள் ஏதும் சுற்றாது                              - பயப்படாதே 3.          இஸ்ரவேலின் பரிசுத்தர் நானே             இரட்சகரான தேவனே             உன்னை மீட்க நான் வந்தேனே             கண்மணிபோல் அருமையானவனே                   - பயப்படாதே 4.