ஆனந்தமே பரமானந்தமே - இயேசு


பல்லவி

                   ஆனந்தமே பரமானந்தமே - இயேசு
                        அண்ணலை அண்டினோர்க் கானந்தமே

சரணங்கள்

1.         இந்தப் புவி ஒரு சொந்தம் அல்ல என்று
            இயேசு என் நேசர் மொழிந்தனரே
            இக்கட்டும் துன்பமும் இயேசுவின் தொண்டர்க்கு
            இங்கேயே பங்காய் கிடைத்திடினும்                              - ஆனந்தமே

2.         கர்த்தாவே நீர் எந்தன் காருண்ய கோட்டையே
            காரணமின்றி கலங்கேனே நான்
            விஸ்வாசப் பேழையில் மேலோகம் வந்திட
            மேவியே சுக்கான் பிடித்திடுமே                         - ஆனந்தமே

3.         என்னுள்ளமே உன்னில் சஞ்சலம் ஏன் வீணாய்?
            கண்ணீரின் பள்ளத்தாக்கல்லோ இது!
            சீயோன் நகரத்தில் சீக்கிரம் சென்று நாம்
            ஜெய கீதம் பாடி மகிழ்ந்திடலாம்                                   - ஆனந்தமே

4.         கூடார வாசிகளாகும் நமக்கிங்கு
            வீடென்றும் நாடென்றும் சொல்லலாமோ?
            கைவேலையில்லாத வீடொன்றை மேலேதான்
            செய்வேன் எனச் சொல்லிப் போகலையோ                       - ஆனந்தமே

5.         துன்பங்கள் தொல்லை இடுக்கண் இடர் இவை
            தொண்டர் எமை அண்டி வந்திடுனும்
            சொல்லி முடியாத ஆறுதல் கிருபையை
            துன்பத்தினூடே அனுப்பிடுவார்                                    - ஆனந்தமே

6.         இயேசுவே சீக்கிரம் இத்தரை வாருமேன்
            ஏழை வெகுவாய்க் கலங்குகிறேனே
            என் நேசர் தன் முக ஜோதியதேயல்லாமல்
            இன்பம் தரும் பொருள் ஏதுமில்லை                               - ஆனந்தமே

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு