30 June 2018

காக்கும் கரங்கள் உண்டெனக்கு


                    காக்கும் கரங்கள் உண்டெனக்கு
                        காத்திடுவார் கிருபையாலே
                        அல்லேலூயா பாடிப்பாடி
                        அலைகளை நான் தாண்டிடுவேன்
                        நம்பிவா இயேசுவை நம்பி வா இயேசுவை

1.         நிந்தனைகள் போராட்டம் வந்தும்
            நீதியின் தேவன் தாங்கினாரே
            நேசக்கொடி என் மேல் பறக்க
            நேசருக்காய் ஜீவித்திடுவேன்                            - நம்பி

2.         கன்மலைகள் பெயர்க்கும் படியாய்
            கர்த்தர் உன்னைக் கரம் பிடித்தார்
            காத்திருந்து பெலன் அடைந்து
            கழுகு போலே எழும்பிடுவாய்                             - நம்பி

3.         அத்திமரம் துளிர்விடாமல்
            ஆட்டுமந்தை முதலற்றாலும்
            கர்த்தருக்குக் காத்திருப்போர்
            வெட்கப்பட்டுப் போவதில்லை                           - நம்பி

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...