கர்த்தரை நம்பியே ஜீவிப்போம்
கர்த்தரை நம்பியே ஜீவிப்போம்
கவலை
கஷ்டங்கள் தீர்ந்திடும்
கைவிடா காத்திடும் பரமனின்
கரங்களை
நாம் பற்றிக் கொள்வோம்
1. ஜீவ
தேவன் பின் செல்லுவோம்
ஜீவ
ஒளிதனைக் கண்டடைவோம்
மனதின்
காரிருள் நீங்கிடவே
மா
சமாதானம் தங்கும் - கர்த்தரை
2. உண்மை
வழி நடந்திடும்
உத்தமனுக்கென்றும் கர்த்தர் துணை
கண்கள்
அவன்மீது வைத்திடுவார்
கருத்தாய்க் காத்திடுவார் - கர்த்தரை
3. உள்ளமதின் பாரங்களை
ஊக்கமாய்க் கர்த்தரிடம் சொல்லுவோம்
இக்கட்டு
நேரத்தில் கூப்பிடுவோம்
இயேசு
வந்தாதரிப்பார் - கர்த்தரை
4. அன்புமிகு அண்ணலிவர்
அருமை
இயேசுவை நெருங்குவோம்
தம்மண்டை வந்தோரைத் தள்ளிடாரே
தாங்கி
அணைத்திடுவார் - 2 - கர்த்தரை
5. நீதிமானின்
சிரசினின் மேல்
நித்திய
ஆசீர் வந்திறங்குமே
கிருபை
நன்மைகள் தொடருமே
கேட்பது
கிடைக்குமே - 2 - கர்த்தரை
6. இம்மைக்கேற்ற இன்பங்களை
நம்மை
விட்டே முற்றும் அகற்றுவோம்
மாறாத
சந்தோஷம் தேடிடுவோம்
மறுமை
ராஜ்ஜியத்தில் - 2 - கர்த்தரை
- சாராள் நவரோஜி
Comments
Post a Comment