பரலோக நாடெந்தன் இன்ப நாடாமெனக்கு


பல்லவி

                   பரலோக நாடெந்தன் இன்ப நாடாமெனக்கு
                        என்று நான் கண்டு களிப்பேனோ?

அனுபல்லவி

                        ஆ மகிமையே! ஆ பேரின்பமே!
                        என்று நான் கண்டானந்திப்பேனோ - பரலோக

1.         சேவை செய்திடுவார் தூதர்கள் - நானங்கு
            சேவிப்பேன் நித்தியும் நேசரை!
            ஆ என் இன்பமே! ஆனந்த பாக்கியமே!
            நாவினா லியம்பவு மேலாதே!                 - பரலோக

2.         சொர்க்கத்தில் ஆ எந்தன் நம்பிக்கை அழியாத
            சொர்ண மயமான வேலைகள்
            சோபன கீதமே, சுந்தர நாடதே!
            சுதா்த ரொருமித்து வாழ்வாரே!             - பரலோக

3.         தெய்வ சித்தம் செய்யும் பிள்ளைகள் - ஜீவிப்பார்
            மாதா பிதா மற்றும் சோதரர்,
            உத்தம ஜீவிகள், சொர்க்கத்தின் வாசிகள்
            கஷ்டம் சகித்திட்ட சுத்தர்கள்!            - பரலோக

4.         யேசுவே என் சம்பத்தல்லவோ நிச்சயம்
            என்று மழியா சுதந்தரம்!
            ஈலோக இன்பத்தைக் குப்பை யென்றெண்ணினேன்
            யேசுவே எந்தனின் இன்பமே!                 - பரலோக

5.         வெறுத்துவிடுவேன் எந்தன் ஜீவனை - லோகத்தில்
            செல்லுவேன் கஷ்டத்தின் பாதையில்
            மாயை மாயையே லோகத்தின் இன்பமே!
            வாடா முடி சூட ஏகுவேன்                    - பரலோக

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு