பரிசுத்தர் கூட்டம் நடுவில்


                   பரிசுத்தர் கூட்டம் நடுவில்
                        ஜொலித்திடும் சுத்த ஜோதியே
                        அரூபியே இவ்வேளையில்
                        அடியார் நெஞ்சம் வாரீரோ

1.         மீன் கேட்டால் பாம்பை அருள்வார் உண்டோ
            கல்தின்ன கொடுக்கும் பெற்றோர் உண்டோ
            பொல்லாதோர் கூட செய்திடார்
            நற்பிதா அருளிடுவார்                          - பரிசுத்தர்

2.         சுத்தம் விரும்பும் சுத்த ஜோதியே
            விரும்பா அசுத்தம் யாவும் போக்குமே
            பாவி நீச பாவி நானையா
            தேவா இரக்கம் செய்ய மாட்டீரோ          - பரிசுத்தர்

3.         பாரும் தந்தையே எந்தன் உள்ளத்தை
            யாரும் காணா உள் அலங்கோலத்தை
            மனம் நொந்து மருளுகின்றேன்
            பரிசுத்தம் கெஞ்சுகின்றேன்                   - பரிசுத்தர்

4.         துணை வேண்டும் தகப்பனே உலகிலே
            என்னை எதிர்க்கும் சக்திகள் பல உண்டே
            என் ஜீவன் எல்லை எங்கிலும்
            பரிசுத்தம் என எழுதும்                         - பரிசுத்தர்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு