தாகம் தீர்க்கும் ஜீவ நதி


பல்லவி

                   தாகம் தீர்க்கும் ஜீவ நதி
                        தரணியில் உண்டோ எனத் தேடினேன்

சரணங்கள்

1.         அருவியின் நீரை பருகி விட்டேன்
            ஆற்றினில் ஊற்றையும் பருகிவிட்டேன்
            துரவுகள் கடலும் தாகம் தீர்க்க வில்லை
            தூரத்துக் கானலாய் ஆகியதே                          - தாகம்

2.         கானகம் சோலையும் தேடியபின்
            வானகம் நோக்கியே அபயமிட்டேன்
            கண்களைத் திறந்தேன் ஐந்தருவியென
            கன்மலையொன்றில் நீர் சுரக்கக் கண்டேன்        - தாகம்

3.         பருகியே வாழ்த்தினேன் தாகமில்லை
            அருகினில் சென்றேன் கன்மலையுமில்லை
            காயங்கள் தன்னில் செந்நீர் சுரக்க
            கன்மலையாக என் இயேசு நின்றார்                   - தாகம்

4.         ஐயனின் திருவடி வீழ்ந்தேன் நான்
            ஆன்மாவின் தாகமும் தீர்ந்த தென்றேன்
            புன்னகை பூத்த புனிதனும் மறைய
            புது பெலனடைந்தேன் என் உள்ளத்திலே          - தாகம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு