ஜீவியமே ஒரே ஜீவியமே


                        ஜீவியமே ஒரே ஜீவியமே
                        அண்ட சராசரம் அனைத்திலுமே
                        மேவி வசிக்கும் மனிதர் அனைத்தும்
                        பூமியில் வாழ்வது ஒரே தரமே                - ஜீவியமே

சரணங்கள்

1.         பிறப்பதும் இறப்பதும் தெய்வ செயல்
            இடையில் இருப்பது வாழ்க்கையாகும்
            இயேசுவில் சார்வதால் பரிசுத்தம் காணும்
            பரிசுத்தர் ஆட்சியில் சாட்சி கூறும்
            இதைவிடில் முடிவது வீழ்ச்சியாகும்                 - ஜீவியமே

2.         நித்தம் நம்மைவிட்டு செல்வார் பாரீர்
            அவர் பாரும் செல்லும் அவ்விடமும் பாரீர்
            அலறலும் புலம்பலும் உடல்தனைக் கீறலும்
            நரகத்தின் தினசரி காட்சி கேளீர்
            இரக்கத்தின் வழி காணார் கதியும் காண்பீர்      - ஜீவியமே

3.         திறப்பின் முகம் நிற்க ஆட்கள் தேவை
            தியாகத்தின் பாதைக்குச் செல்வோர் தேவை
            என் ஜனம் அழியுதே என ஏங்கும் ஆண்டவர்
            துக்கத்தை தணிக்கும் சீஷர் தேவை
            முன் வருவோர் யார்க்கும் இதுவே வேளை         - ஜீவியமே

4.         எண்ணிப்பார் கழிந்திட்டக் காலமதை
            கதையைப் போல் மனிதரின் நாட்கள் செல்லும்
            உலகத்துச் சேவை சாகையில் ஓயும்
            உன்னுடன் மரித்த பின் வருவதேது
            கிறிஸ்துவின் சேவையே நிலைத்து நிற்கும்      - ஜீவியமே

5.         அர்ப்பணம் தந்தையே கை அளித்தேன்
            கல்வி செல்வம் சுகம் பொருள் அனைத்தும்
            செல்லுவேன் சொல்லுவேன் யேசுவே வழி என
            வாழ்க்கையில் தம்மையே கொண்டு வாழ்வேன்
            என்றுமே அங்கே நான் உம்மில் வாழ்வேன்         - ஜீவியமே

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு