எந்தன் உள்ளம் புதுக்கவியாலே பொங்க


1.       எந்தன் உள்ளம் புதுக்கவியாலே பொங்க
            இயேசுவைப் பாடிடுவேன்
            அவர் நாமம் ஊற்றுண்ட பரிமளதைலம்
            அவரையே நேசிக்கிறேன்

பல்லவி

                        அல்லேலுயா துதி அல்லேலூயா - எந்தன்
                        அண்ணலாம் இயேசுவைப் பாடிடுவேன்
                        இத்தனை கிருபைகள் நித்தமும் அருளிய
                        கர்த்தனைக் கொண்டாடுவேன்

2.         சென்ற காலம் முழுவதும் காத்தாரே ஓர்
            சேதமும் அணுகாமல்
            சொந்தமாக ஆசீர் பொழிந்தெனக்கென்றும்
            சுகபெலன் அளித்தாரே                                     - அல்லே

3.         சிலவேளை இமைப்பொழுதே தம் முகத்தை
            சிருஷ்டிகர் மறைத்தாரே
            கடும்கோபம் நீங்கி திரும்பவும் என்மேல்
            கிருபையும் பொழிந்தாரே                                  - அல்லே

4.         பஞ்சகாலம் பெருகிட நேர்ந்தாலும் தாம்
            தஞ்சமே யானாரே
            அங்கும் இங்கும் நோய்கள் பரவி வந்தாலும்
            அடைக்கலம் அளித்தாரே                               - அல்லே

5.         களிப்போடு விரைந்தெம்மைச் சேர்த்திட என்
            கர்த்தரே வருவாரே
            ஆவலோடு நாளும் வானத்தை நோக்கி
            அனுதினம் காத்திருப்போம்                              - அல்லே

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு