விளைந்த பலனை அறுப்பாரில்லை
விளைவின்
நற்பலன் வாடிடுதே
அறுவடை
மிகுதி ஆளோ இல்லை
அந்தோ
மனிதர் அழிகின்றாரே
சரணங்கள்
1. அவர்போல்
பேசிட நாவ இல்லை
அவர்போல்
அலைந்திட கால்கள் இல்லை
எண்ணிலடங்கா
மாந்தர் சப்தம்
உந்தன்
செவியினில் தொனிக்கலையோ - விளைந்த
2. ஆத்தும
இரட்சண்யம் அடையாதவர்
ஆயிரம்
ஆயிரம் அழிகிறாரே
திறப்பின்
வாசலில் நிற்பவர் யார்?
தினமும்
அவர் குரல் கேட்கலையோ? - விளைந்த
3. ஆத்தும
தரிசனம் கண்டிடுவாய்
ஆண்டவர்
வாக்கினை ஏற்றிடுவாய்
விரைந்து
சென்று சேவை செய்வாய்
விளைவின்
பலனை அறிந்திடுவாய் - விளைந்த
4. ஒரு
மனம் ஒற்றுமை ஏகசிந்தை
சபைதனில்
விளங்கிட செயல்படுவாய்
நிமிர்ந்து
நிற்கும் தூண்களைப் போல்
நிலைவரமாய்
என்றும் தாங்கி நிற்பாய் - விளைந்த
5. ஆவியின்
வரங்கள் ஒன்பதனை
ஆவலுடன்
நீயும் பெற்றிடுவாய்
சபையின்
நன்மைக்காய் உபயோகிப்பாய்
சந்ததம்
சபையினில் நிலைத்திருப்பாய் - விளைந்த
6. தேவனின்
சேவையில் பொறுப்பெடுப்பாய்
மனிதனின்
பங்கினை ஏற்றிடுவாய்
கர்த்தர்
நாட்டின தோட்டத்திலே
கடைசி
வரை நீயும் கனி கொடுப்பாய் -
விளைந்த
No comments:
Post a Comment