கர்த்தாவே என் பெலனே


பல்லவி

                   கர்த்தாவே என் பெலனே
                        உம்மில் அன்பு கூடுவேன்
                        உத்தமமானதும் வழிதானே

சரணங்கள்

1.         என் கன்மலையும் என் கோட்டையும்
            என் ரட்சகரும் என் தேவனும்
            என் கேடகமும் ரட்சண்யக் கொம்பும்
            என் உயர்ந்த அடைக்கலமானவர்                     - கர்த்தாவே

2.         மரணக் கட்டுகள் சூழ்ந்து கொண்டது
            துர்ச்சன ப்ரவாகம் பயப்படுத்தினது
            பாதாளக் கட்டுகள் சூழ்ந்து கொண்டது
            மரணக் கண்ணிகளென் மேல் விழுந்தது            - கர்த்தாவே

3.         வானங்களைத் தாழ்த்தி இறங்கினார்
            பாதங்களின் கீழ் இருள் இருந்தது
            கேரூபீன் மேலேறி வேகமாய்ச் சென்றார்
            காற்றின் செட்டைகளைக் கொண்டு பறந்தார்    - கர்த்தாவே

4.         இருளை தமக்கு மறைவிடமாக்கி
            மேகங்களைக் கூடாரமாக்கினார்
            வானங்களில் கர்த்தர் குமுறினார்
            தமது சத்தத்தைக் தொனிக்கப்பண்ணினார்      - கர்த்தாவே

5.         தயவுள்ளவனுக்குத் தயவுள்ளவரே
            உத்தமனுக்கு நீர் உத்தமரே
            புனிதனுக்கு நீர் புனிதரானவரே
            மாறுகிறவனுக்கு நீர் மாறுகிறவரே                     - கர்த்தாவே

6.         சிறுமைப்பட்ட ஜனத்தை ரட்சிப்பீர்
            மேட்டிமையான கண்களைத் தாழ்த்துவீர்
            தேவரீர் என் விளக்கை ஏற்றுவீர்
            இருளை நீர் வெளிச்சமாக்குவீர்                       - கர்த்தாவே

7.         உம்மாலே ஒரு சேனைக்குள் பாய்வேன்
            தம்மாலே ஒரு மதிலைத் தாண்டுவேன்
            சத்துருவை நான் தொடர்ந்து பிடிப்பேன்
            நிர்மூலமாக்கும் வரைக்கும் திரும்பேன்             - கர்த்தாவே

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு