Posts

Showing posts from May, 2020

அணைக்கும் கரங்கள் உண்டு

அணைக்கும் கரங்கள் உண்டு                    அணைக்கும் கரங்கள் உண்டு                         ஆற்றும் நேசர் உண்டு                         வேஷமான மனித உலகில்                         தேற்றும் தேவன் உண்டு   1.          அன்பின் பஞ்சத்தினால் அலைந்து திரிந்தேனே             மிஞ்சும் சோகத்தினால் நெஞ்சம் துடித்தேனே             அன்பர் அன்புதுன்பம் நீக்க இன்பம் கண்டேனே   2.          அள்ளி அணைத்திடுவார்             அணைத்து முத்தம் செய்வார்             துள்ளி தூக்கிடுவார் தோளில் சுமந்திடுவார்             இதய ஏக்கம் தீர்க்கும் தேவன்             இயேசு நல்லவரே   3.          ஆதி அன்புதனில் தினமும் திளைத்திடவே             ஆவி ஈந்தருளும் அனலை மூட்டிவிடும்             வெள்ளம் திரண்ட தண்ணீரும்             அன்பை அணைக்க முடியாதே   4.          உண்மை அன்பு என்னை             தேற்ற யாருமில்லை             சுற்றத்தாரின் அன்பு சூன்யமாகிடுதே             தவிக்கும் உள்ளம் தாகம் தீர             உம்மில் மகிழ்ந்திடுவேன்

அணி அணியாய் வாருங்கள் அன்பு மாந்தரே

அணி அணியாய் வாருங்கள் அன்பு மாந்தரே                     அணி அணியாய் வாருங்கள் அன்பு மாந்தரே                         ஆண்டவர் இயேசுவின் சாட்சி நீங்களே - 2   1.          அன்புப் பணியாலே உலகை வெல்லுங்கள்             இன்பம் துன்பம் யாவையும் தாங்கிடுங்கள் - 2             எளியவர் வாழ்வில் துணை நின்று             இயேசுவின் சாட்சியாய் நிலைத்திருங்கள் - 2   2.          மண்ணகத்தில் பொருளை சேர்க்க வேண்டாம்             மறைந்து ஒளிந்து போய்விடுமே - 2             விண்ணில் பொருளை தினம் சேர்த்து             இயேசுவின் சாட்சியாய் நிலைத்திருங்கள் - 2

அண்ணன்மாரே தம்பிமாரே வாங்க

அண்ணன்மாரே தம்பிமாரே வாங்க                     அண்ணன்மாரே தம்பிமாரே வாங்க                         அக்காமாரே தங்கைமாரே வாங்க                         அம்மாமாரே அய்யாமாரே வாங்க                         அண்ணன்மாரே தம்பிமாரே வாங்க                         நல்ல செய்தி சொல்லுவேன்                         நின்னு கொஞ்சம் கேளுங்க                         எந்நாளும் எப்போதும் சந்தோசமே   1.          இந்த உலகம் என்றும் நமக்கு             சொந்தம் இல்லவே இல்லையே             பரம கானான் தேசம் ஒன்று             கர்த்தர் வைத்தார் நமக்காக             நம்ம வீடு அங்கேதானுங்க             எந்தநாளும் இன்பம்தானுங்க   2.          மனிதன் செய்த பாவங்கள் எல்லாம்             மன்னித்து இரட்சிப்பை தந்திடவே             இயேசு வந்தார் நம்மை அழைக்க             புதிய பாதையில் நடத்திச் செல்ல             நல்ல மேய்ப்பன் நம்ம இயேசுங்க             அவர் பின்னால் போவோம் வாருங்க   3.          இதுவரை வாழ்ந்த வாழ்க்கை எல்லாம்             சொல்லிக் கொள்ள ஒன்