அழியுதே என் ஜனம்
நான்
என்ன செய்ய வேண்டும்
ஒவ்வொரு
நாளும் என் உள்ளம்
உருகி
உடையுதே
1. கண்ணீர்
சிந்தும் கண்களாய்
என்
கண்கள் மாறாதோ
ஆத்தும
மீட்பின் தரிசனம்
என்
உள்ளத்தில் தோன்றாதோ
2. ஆத்தும
மீட்பிற்காய் நடந்திடும்
கால்களாய்
என் கால்கள் மாறாதோ
அழிவை
நோக்கி செல்வோரை
அப்பா
மீட்க மாட்டீரோ
3. ஆத்தும
மீட்பிற்காய் உழைத்திடும்
கைகளாய்
என் கைகள் மாறாதோ
ஆண்டவர்
அன்பை அறிவிக்க
எந்தனின்
பணம் பொருள் போகாதோ
No comments:
Post a Comment