அண்ணன்மாரே தம்பிமாரே வாங்க
அக்காமாரே
தங்கைமாரே வாங்க
அம்மாமாரே
அய்யாமாரே வாங்க
அண்ணன்மாரே
தம்பிமாரே வாங்க
நல்ல
செய்தி சொல்லுவேன்
நின்னு
கொஞ்சம் கேளுங்க
எந்நாளும்
எப்போதும் சந்தோசமே
1. இந்த உலகம் என்றும் நமக்கு
சொந்தம் இல்லவே இல்லையே
பரம கானான் தேசம் ஒன்று
கர்த்தர் வைத்தார் நமக்காக
நம்ம வீடு அங்கேதானுங்க
எந்தநாளும் இன்பம்தானுங்க
2. மனிதன் செய்த பாவங்கள் எல்லாம்
மன்னித்து இரட்சிப்பை தந்திடவே
இயேசு வந்தார் நம்மை அழைக்க
புதிய பாதையில் நடத்திச் செல்ல
நல்ல மேய்ப்பன் நம்ம இயேசுங்க
அவர் பின்னால் போவோம் வாருங்க
3. இதுவரை வாழ்ந்த வாழ்க்கை எல்லாம்
சொல்லிக் கொள்ள ஒன்னுமே இல்லையே
எதற்காக பிறந்தோம் எதற்காக வாழ்ந்தோம்
எங்கே நாம் போகப் போகிறோம்
இந்த நேரத்தில் இத நினைச்சிப் பாருங்க
உங்க வாழ்க்கைத்தான் இப்போ மாற வேணுங்க
- CARDINAL REV.DR.V.G.SELVARAJ
https://www.youtube.com/watch?v=GKiLsormka0
No comments:
Post a Comment