அடிமை
நான் ஆண்டவரே
அண்டினேன் உம் சமூகமே
ஆட்கொள்ளும் என் நேசரே
அப்பா உன் பாதம் சரணடைந்தேன்
1. பாவத்தில் மூழ்கி நான் தவித்தேன்
பரிசுத்தரை அறியா நான் திரிந்தேன்
பாவியை கண்டீரே பாசம் கொண்டீரே
அப்பா உன் பாதம் சரணடைந்தேன்
தேவனே என் ஜீவ நாளெல்லாம்
வாழுவேன் நான் என்றும் உமக்காக
2. அன்பை தேடித்தேடி நான் அலைந்தேன்
அன்பில்லா உலகத்தில் நான் சோர்ந்தேன்
அன்புடன் அழைத்தீரே அன்பை தந்தீரே
அப்பா உன் பாதம் சரணடைந்தேன்
3. இனி என் வாழ்வு எல்லாம் நீ இயேசுவே
உம் சித்தமே எந்தன் முழு நோக்கமே
உறவாட பணிந்தேன் உம்மோடு இணைந்தேன்
அப்பா உன் பாதம் சரணடைந்தேன்
No comments:
Post a Comment