பல்லவி
அண்ணல்
கிறிஸ்தேசையனே - அரும்பாவிக்கும்
திண்ணமாய்
இரட்சை ஈயும் புண்ணிய புனிதனே!
சரணங்கள்
1. இருண்ட
பாவ உளையில் புரண்ட பாவி எந்தனை
திரண்ட
தயவால் தூக்கி திரும்ப இந்நிர்ப்பந்தனை
திருவழியில்
- அவரருளொளியில் - தினம்
தேற்றி
நடத்தி ஆளும் - அண்ணல்
2. மனதுக்கோர்
வழிகாட்டி மார்க்க நெறியிலோட்டி
தினம்
மறை அமுதூட்டி திருவருள் தனைச் சூட்டி
தினம்
காப்பாரே; என்னருள் மேய்ப்பரே - எந்தன்
தேசிகரும்
அவரே! - அண்ணல்
3. உண்மையாய்
மனம் நொந்து உருகி வரும் பாவிக்கு
ஜென்ம
பாவத்தோடவன் கன்மபாவமும் போக்கி
புரிவாரோ
- இரட்சை - அவர் நேரே - திவ்விய
குருவாயுதித்தவரே
- அண்ணல்
4. பாவியே
நீயும் இன்று பரமன் இயேசுவை அண்டு
தாவியுன்
மனங்கண்டு தர இரட்சை அங்கே யுண்டு
தவறாதே
- மனம் - பதறாதே - நல்ல
தருணமிதை
விடாதே - அண்ணல்
No comments:
Post a Comment