அண்ணல் கிறிஸ்தேசையனே அரும்பாவிக்கும்

அண்ணல் கிறிஸ்தேசையனே அரும்பாவிக்கும்

பல்லவி

                        அண்ணல் கிறிஸ்தேசையனே - அரும்பாவிக்கும்

                        திண்ணமாய் இரட்சை ஈயும் புண்ணிய புனிதனே!

 

சரணங்கள்

1.         இருண்ட பாவ உளையில் புரண்ட பாவி எந்தனை

            திரண்ட தயவால் தூக்கி திரும்ப இந்நிர்ப்பந்தனை

            திருவழியில் - அவரருளொளியில் - தினம்

            தேற்றி நடத்தி ஆளும் - அண்ணல்

 

2.         மனதுக்கோர் வழிகாட்டி மார்க்க நெறியிலோட்டி

            தினம் மறை அமுதூட்டி திருவருள் தனைச் சூட்டி

            தினம் காப்பாரே; என்னருள் மேய்ப்பரே - எந்தன்

            தேசிகரும் அவரே! - அண்ணல்

 

3.         உண்மையாய் மனம் நொந்து உருகி வரும் பாவிக்கு

            ஜென்ம பாவத்தோடவன் கன்மபாவமும் போக்கி

            புரிவாரோ - இரட்சை - அவர் நேரே - திவ்விய

            குருவாயுதித்தவரே - அண்ணல்

 

4.         பாவியே நீயும் இன்று பரமன் இயேசுவை அண்டு

            தாவியுன் மனங்கண்டு தர இரட்சை அங்கே யுண்டு

            தவறாதே - மனம் - பதறாதே - நல்ல

            தருணமிதை விடாதே - அண்ணல்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு