இராகம்: செஞ்சுருட்டி தாளம்:
ரூபகம்
அஞ்சலோடு
நெஞ்சுருகி ஆவலாய் வந்தேன் - ஏழை
ஆரென்றடியேனலறும் அபயம் கேள் ஐயா!
சரணங்கள்
1. சஞ்சலம் தவிர்க்க உந்தன் தஞ்சமேயல்லால் -
இத்
தரணியில் யாதும் காணேன் தாரகம் நீயே -
அஞ்சலோடு
2. நித்திரையில் விக்கினத்துட் புக்கிடாமலே
- நின்
சித்தம் வைத்தெனை ரட்சித்த தேவே ஸ்தோத்ரமே
- அஞ்சலோடு
3. இன்றடியான் செய்யும் வேலை யாவிலு முந்தன்
- நல்
இன்ப ரூபம் தனை என் முன்பில் இயங்கச் செய்யுமேன்
- அஞ்சலோடு
4. பார்வை பேச்சு கேள்வி சிந்தை யாவினாலுமே
- வரும்
பாவ தோஷங்கட்கு என்னைப் பாதுகாரையா - அஞ்சலோடு
5. ஆயனே அடியானுக்கு நாயன் நீரல்லால் - இம்
மாய வாழ்வில் ஒன்றுமில்லை மாய்கை மாய்கையே
- அஞ்சலோடு
No comments:
Post a Comment