30 January 2019
பாவம் போக்கும் ஜீவநதியைப்
எப்படியும் பாவிகளை
விலைமதியா ரத்தத்தாலே
மரித்தாரே கிறிஸ்தேசு
இயேசு நாமம் ஒன்றை நம்புவீர்
வான இராச்சியம் வந்ததோ கோகோ
காலத்தின் அருமையை அறிந்து வாழாவிடில்
விசுவாசியின் காதில் பட
அருமருந்தொரு சற்குரு மருந்து
அருமருந்தொரு
சற்குரு மருந்து
127. தேசியதோடி ஆதி தாளம்
பல்லவி
அருமருந்தொரு
சற்குரு மருந்து,
அகிலமீடேற இதோ திவ்யமருந்து.
சரணங்கள்
1. திருவளர்தெய்வம் சமைத்த மருந்து,
தீனர் பாவப்பிணியைத் தீர்க்கு மருந்து.
2. செத்தோரை வாழ்விக்கும் ஜீவ மருந்து,
ஜெகமெல்லாம் வழங்கும் இத்தெய்வ மருந்து.
3. இருதய சுத்தியை ஈயுமருந்து,
இகபரசாதனம் ஆகும் மருந்து.
4. ஆத்மபசிதாகம் தீர்க்கு மருந்து,
அவனியோர்[1] அழியா
கற்பக மருந்து.
5. சித்த சமாதானம் உண்டாக்கு மருந்து,
ஜீவன்முத்தி தருஞ்சேணுள்ள மருந்து.
6. உலகத்தில் ஜீவசக்தி தந்த மருந்து,
உலவாத[2] அமிழ்தென
வந்த மருந்து.
7. தேசநன்மை பயக்கும் திவ்ய மருந்து,
தேவதேவன் திருவடி சேர்க்கு மருந்து.
8. பணமில்லை இலவசமான மருந்து,
பாவிகளுக் கெளிதில் ஏற்படு மருந்து.
9. என்றும் அழியாத தேவருள் மருந்து,
என் பவநீக்கும் யேசு நாதர் மருந்து.
- த.
ஐயாத்துரை
அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்
பாடல் To Download Txt Lyrics file Youtube Link அவர் நாமத்தில் இயேசு நாமத்தில் ...
-
உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன் மேலும் அதிக பாடல்களுக்கு உன்னதரே உம் மறைவில் தங்கி...
-
தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண தாய் மறந்தாலும் நீர...
-
பாடல் மேலும் அதிக பாடல்களுக்கு நான் நடந்து வந்த பாதையிலெல்லாம் ...