விசுவாசியின் காதில் பட


யேசுவென்ற நாமம் இனிப்பாகுது

128. (207) சூரியகாந்தம்                                 ரூபக தாளம்

பல்லவி

          விசுவாசியின் காதில் பட, யேசுவென்ற நாமம்
          விருப்பாயவர் செவியில் தொனி இனிப்பாகுது பாசம்.

சரணங்கள்

1.         பசித்த ஆத்துமாவைப் பசியாற்று மன்னாவதுவே;
            முசிப்பாறுதல் இளைத்தோர்க்கெல்லாம் முற்றும் அந்தப் பெயரே. - விசு

2.         துயரையது நீக்கிக் காயமாற்றிக் குணப்படுத்தும்;
            பயங்கள் யாவும் யேசுவென்றால் பறந்தோடியேபோகும். - விசு

3.         காயப்பட்ட இருதயத்தைக் கழுவிச் சுத்தப்படுத்தும்,
            மாயைகொண்ட நெஞ்சையது மயக்கமின்றிவிடுக்கும் - விசு

4.         எல்லை இல்லாக் கிருபைத்திரள் ஏற்றுநிறைந்திருக்கும்,
            எல்லா நாளும் மாறாச்செல்வம் யேசுவென்ற பெயரே. - விசு

5.         என்னாண்டவா, என் ஜீவனே, என் மார்க்கமே, முடிவே,
            என்னால் வருந்துதியை நீரே ஏற்றுக்கொள்ளும், தேவே. - விசு

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு