எழுந்தார் இறைவன்


எழுந்தார் இறைவன்

68. பியாகு                                                              ஆதிதாளம்

பல்லவி

            எழுந்தார் இறைவன்,-ஜெயமே ஜெயமெனவே
            எழுந்தார் இறைவன்.

சரணங்கள்

1.         விழுந்தவரைக் கரையேற்றப்,-பாவத்
            தழுந்து[1] மனுக்குலத்தை மாற்ற,-விண்ணுக்
            கெழுந்து நாம் அவரையே போற்ற, - எழுந்தார்

2.         செத்தவர் மீண்டுமே பிழைக்க,-உயர்
            நித்திய ஜீவனை அளிக்கத்,-தேவ
            பக்தர் யாவரும் களிக்க. - எழுந்தார்

3.         கருதிய காரியம் வாய்க்கத்,-தேவ
            சுருதி மொழிகளெல்லாம் காக்க,-நம்
            இரு திறத்தாரையும் சேர்க்க. - எழுந்தார்

4.         சாவின் பயங்கரத்தை ஒழிக்கக்,-கெட்ட
            ஆவியின் வல்லமையை அழிக்க,-இப்
            பூவின்மீது சபை செழிக்க. - எழுந்தார்

5.         ஏதுந் தீவினை செய்யாத் தூயன்,-எப்
            போதுமே நன்மைபுரி நேயன்,-தப்
            பாது காத்திடும் நல்லாயன். - எழுந்தார்

- சா. பரமானந்தம்


[1] அமிழ்ந்து

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு