இயேசு நாமம் ஒன்றை நம்புவீர்


யேசுநாமம் ஒன்றை நம்புவீர்

131. (152) கமாஸ்                                                   ஆதி தாளம்

பல்லவி

                   யேசு நாமம் ஒன்றை நம்புவீர்,
                   பூலோகத்தாரே.

சரணங்கள்

1.         யேசு நாமம் ஒன்றை நம்பும்;
            ரட்சண்யத்துக் கிதுவே ஸ்தம்பம்;
            பேசும் வேறே நாமமெல்லாம்
            பேருலகை ரட்சிக்காதே, - யேசு

2.         பார்த்திபன் தவீது குல
            கோத்திரக் கன்னிமரிபால்,
            நேத்திரம் போலே உதித்து
            நேமியின்[1] ரட்சகனான, - யேசு

3.         பூதலத் தஞ்ஞான இருள்
            போக்கவே மெஞ்ஞான பெருஞ்
            ஜோதியாய் விளங்கும் நீதிச்
            சூரிய னான மகத்வ - இயேசு

4.         பாவிகளீடேற மோட்ச
            பாக்கியம் பெறுவதற்காய்
            ஜீவன் விட்டுயிர்த்தெழுந்து
            சேணுலகுக்[2] கேறிச் சென்ற, - யேசு

5.         விண்டலத்தவர்கள் சூழ,
            வெருண்டலகை பதறி வீழ;
            மண்டலத்தைத் தீர்வை செய்ய
            மாமுகில்[3] மீதேறி வரும், - யேசு           

- ஈ. பாக்கியநாதன்


[1] பூமியின்
[2] வானலோகத்திற்கு
[3] மேகம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு