தேன் இனிமையிலும் ஏசுவின்


ஏசுவின் நாமம் திவ்ய மதுரமாமே

125. (206) ஹரிகாம்போதி                  ஆதி தாளம்

பல்லவி

          தேன் இனிமையிலும் ஏசுவின் நாமம் 
          திவ்விய மதுர மாமே;-அதைத்
          தேடியே நாடி ஓடியே வருவாய், தினமும் நீ மனமே.

சரணங்கள்

1. காசினிதனிலே நேசமதாகக் கஷ்டத்தை உத்தரித்தே;-பாவக்
    கசடதை அறுத்துச் சாபத்தைத் தொலைத்தார்; கண்டுணர் நீ, மனமே. - தேன்

2. பாவியை மீட்கத் தாவியே உயிரைத் தாமே ஈந்தவராம்;-பின்னும்
    நேமியாம் கருணை நிலைவரமுண்டு; நிதம் துதி, என் மனமே. - தேன்

3. காலையில் பனிபோல் மாயமாய் உலகம் உபாயமாய் நீங்கிவிடும்;-என்றும்
    கர்த்தரின் பாதம் நிச்சயம் நம்பு கருத்தாய் நீ, மனமே. - தேன்

4. துன்பத்தில் இன்பம் தொல்லையில் நல்ல துணைவராம் நேச ரிடம்;-நீயும்
    அன்பதாய்ச் சேர்த்தால் அணைத்துனைக் காப்பார்; ஆசைகொள் நீ, மனமே. - தேன்

5. பூலோகத்தாரும் மேலோகத்தாரும் புகழ்ந்து போற்று நாமம்;-அதைப்
    பூண்டுகொண் டால்தான் பொன்னகர் வாழ்வில் புகுவாய் நீ, மனமே. - தேன்

- அ. சவரிமுத்து


Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு