அரூபியே அரூப சொரூபியே


எமை ஆளும் பரிசுத் தரூபியே

111. (131) சேனாவதி                                               ரூபக தாளம்

பல்லவி

                   அரூபியே, அரூப சொரூபியே,-எமை
                   ஆளும் பரிசுத்தரூபியே, அரூப சொரூபியே.

அனுபல்லவி

            திருவிணா[1] டுறை நிதான கருணையா திபதி மோன[2]
            சுரநரர் வணங்கும் வான ஒரு பரா பர மெய்ஞ்ஞான - அரு

சரணங்கள்

1.         ஆதி காரண அரூபியே,-அசரீரி சத்ய
            நீதி ஆரண[3] சொரூபியே,
            வேத வாசக சமுத்ர, ஓதும் வாய்மைகள் சுமுத்ர,[4]
            தீதிலா துயர் விசித்ர, ஜாதி யாருட பவித்ர - அரூ

2.         சீரு லாவிய தெய்வீகமே,-திரி முதல் ஒரு பொருள்
            ஏரு[5] லாவிய சிநேகமே,
            பாருளோர் பணிந்து போற்றும் ஆரியா,[6] அடியர் சாற்றும்
            நேரமே புகழை ஏற்றும்; வீரமாய் மனதை ஆற்றும் - அரூ

3.         பக்தர் பாதகம் அடாமலே,-பசா சுலகுடல்
            சத்ரு சோதனை படாமலே,
            அத்தனார் தேவ கோபம், நித்ய வேதனைகள் சாபம்,
            முற்றும் மாறிடத் தயாபம் வைத்து நீடுன் ப்ரதாபம் - அரூ

- வே. சாஸ்திரியார்


[1] மோட்சலோகம்
[2] மௌன
[3] வேதம்
[4] சரியளவான
[5] அழகு
[6] குருவே

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு