இயேசு நாமமல்லாம் உலகினில்


வேறு நாமம் இல்லை

124. (151) வனஸ்பதி                           ஆதி தாளம்

பல்லவி

            யேசு நாமமல்லாம்-உலகினில்
            வேறு நாமம் இல்லை,-கிறிஸ்து

அனுபல்லவி

            தேசுலாவிய கேரூபீம்பணி
            திவ்ய வானவர் முனிவர் கண்மணி,
            மாசில்லாத மெய்ஞ்ஞான சிகாமணி,
            மதிக்கும் சத்திய வேத சிரோமணி - யேசு

சரணங்கள்

1.         வானமும் புவியும்-கதி-ரோன் மதி[1] உடுவும்[2]
            கானல் வரை[3] கடலும்-நர-ரான எவ்வுயிரும்
            தானே படைத்தருள் ஆதி காரணன்,
            சர்வ ஜீவ தயாபரா பூரணன்,
            ஈனர் வாக்குக் கெட்டாத மெய்யாரணன்,
            இலங்கும் வேத சங்கீத பாராயணன். - யேசு

2.         காவிலாத மேவை-செய்-தீவினையதனால்
            பூவின் மாந்தர் படும்-துயர்-தேவ கோபமற,
            பாவிகளைப் பரனோடுற வாக்கப்,
            பரம எருசலேம் நகர் சேர்க்க,
            மேவுமலகை அரணைத் தூளாக்க,
            மேதினியில் சமாதானம் உண்டாக்க. - யேசு

3.         பண்டு வேதியர்கள்-கைக்-கொண்ட மாமறையில்
            விண்ட நாமமல்லாமல்-உயர்-அண்ட மீதினிலும்,
            மண்டலத்திலும், ஆழி கீழிலும்
            மாருதம்[4] செலும் அட்ட திக்கிலும்,
            தொண்டர் கூக்குரல் எட்டும் தூரத்திலும்,
            துஷ்டர் வர விரும்பாத இடத்திலும். - யேசு

- ஈசாக்கு பாக்கியநாதன்


[1] சந்திரன்
[2] நட்சத்திரம்
[3] மலை
[4] காற்று

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு