காலத்தின் அருமையை அறிந்து வாழாவிடில்


என் காலம் உமது கரத்திலிருக்கிறது

129. தன்யாசி                                                ஆதி தாளம்

பல்லவி

                    காலத்தின் அருமையை அறிந்து வாழாவிடில்
                    கண்ணீர் விடுவாயே.

அனுபல்லவி

                        ஞாலத்தில் பரனுன்னை நாட்டின நோக்கத்தைச்
                        சீலமாய் நினைத்தவர் மூலம் பிழைத்திடுவாய் - காலத்தின்

சரணங்கள்

1.         மதியை யிழந்துதீய வழியிலே நீ நடந்தால்
            வருங்கோபம் அறிந்திடாயோ?
            கதியாம் ரக்ஷண்ய வாழ்வை கண்டு நீ மகிழ்ந்திட
            காலம் இதுவே நல்ல காலம் என்றறியாயோ? - காலத்தின்

2.         இகத்தினில் ஊழியம் அகத்தினில் நிறைவேற
            ஏசுனை அழைத்தாரல்லோ?
            மகத்துவ வேலையை மறந்து தூங்குவாயானால்
            பகற்கால முடியும் ராக்காலத்திலென்ன செய்வாய்? - காலத்தின்
3.         நோவாவின் காலத்தில் நூற்றிருபது ஆண்டு
            நோக்கிப்பின் அழித்தாரன்றோ?
            தாவாத கிருபையால் தாங்கி உனக்களித்த
            தவணையின் காலமிவ் வருட முடியலாமே - காலத்தின்
4.         முந்தின எரேமியா அனனியாவுக் குரைத்த
            முடிவை நீ அறியாயோ?
            எந்தக் காலமும் சிரஞ்சீவியென்றெண்ணிடாமல்
            ஏற்ற ஆயத்தமாய் எப்போதும் இருந்திடாயோ? - காலத்தின்

-சா. பரமானந்தம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு