சமயமிது நல்லசமயம் உமதாவி


உமதாவி தரவேணுமே

115. மோகனம்                                                         ஆதி தாளம்

பல்லவி

                             சமயமிது நல்லசமயம், உமதாவி
                             தரவேணுமே சாமி.

அனுபல்லவி

                        அமையுஞ் சத்துவங்குன்றி,
                        அருள்ஞானத் துயிரின்றி,
                        அமர்ந்து சேர்ந்தெழும்பா துறங்கிடும்
                        அடியன்மீ தனல்மூட்டி யுயிர்தர, - சமய

1.         யேசுகிறிஸ்துவின்மேல் நேசம் பக்தியும்விசு
            வாசம் நம்பிக்கை சமாதானம் மங்கிடலாச்சே;
            வீசுங்கிரணத்தாவி நேசச்சுவாலைமூட்டி
            மிஞ்சுஞ்சீவ நற்கனிகளீங்குமைக்
            கெஞ்சுதாசனின் மனதிலோங்கிட, - சமய

2.         ஜெயமோதவமோ தேவதியானமோ வாஞ்சையோ
            செய்யுஞ்சுயமுயற்சி தொய்யுங் காரணமேனோ?
            தவனம்[1] ஞானாமுதின்மேல் சற்றுமில்லாததேனோ?
            தந்தையேயுயிர் தந்தென்னைத்தாங்கிட
            உந்தயையினுற் சாகநல்லாவியை, - சமய

3.         ஓதும் பிரசங்கமும் ஓசைக்கைத்தாளம்போல
            ஒலிக்குதல்லாமல் பலன் பலிக்குதில்லை, தாக்குள்
            ஏதுமற்றிடும் பள்ளத்தெலும்பு உயிர்த்தெழும்ப
            எசேக்கியேலுரை வாக்கிலுயிரருள்
            போக்கியே செய்த ஆவியே இங்ஙனம். - சமய

4.         பெந்தெகோஸ்தினில் கூடிவந்த சீடரையன்று
            உந்தனாவியினைப் பொழிந்தபிஷேகஞ்செய்த
            விந்தைபோலெமதிடம் வந்தெம் வேலைகள்முற்றும்
            வேதனே உமதருளி னுயிர்பெறப்
            பூதலர் உமைப் போற்றநின் சேயராய். - சமய
­
-வே. மாசிலாமணி


[1] ஆசை

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு